எம்பிக்கள் ரவிக்குமார், பாரிவேந்தர், கணேசமூர்த்தி, சின்ராஜ் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிக்கை
Recommended Video
சென்னை: திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார், ஈரோடு தொகுதி எம்பி கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர், நாமக்கல் தொகுதி எம்பி சின்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கவும் கோரிக்கை எழுந்தது.
கட்சி உறுப்பினர்களாக இல்லாதவர்களை திமுக, அதிமுக வேட்பாளர்களாக அறிவித்து, பி படிவம் வழங்கியதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர், அந்த கட்சியில் இருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் வேட்பாளராக, அந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பொது நல வழக்காக மனுவை பட்டியலிட நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு பதிவுத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிற கட்சியினரை விழுப்புரம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர்களாக அங்கீகரித்தும்; தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளராகவும் அங்கரித்தும் திமுக, அதிமுக கட்சிகள் அளித்த பி படிவத்தை தேர்தல் அதிகாரிகள் ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை எழுந்தது.
திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார், ஈரோடு தொகுதி எம்பி கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர், நாமக்கல் தொகுதி எம்பி சின்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கவும் கோரிக்கை எழுந்தது.












Click it and Unblock the Notifications