நடிகை சித்ராவின் இன்ஸ்டாவில் முக்கிய போட்டோஸ் திடீரென அழிப்பு! ஏன் என்னாச்சு? மரணத்திற்கு க்ளூ?
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை ஏன் அழிக்கப்பட்டன, இந்த போட்டோக்களுக்கும் சித்ரா மரணத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகை சித்ரா தனது கடின உழைப்பால் மக்கள் மனதில் இடம் பெறும் அளவுக்கு முன்னுக்கு வந்தவர். அவர் விஜே, சீரியல் நடிகை என ஜொலித்துவிட்டு சினிமாவில் கால் பதித்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜே சித்ரா மரணமடைந்து ஓராண்டுக்கு மேலாகியுள்ள நிலையில் அவரது மரண வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. சித்ராவின் மரணத்தில் தொடர்புடையவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என அவரது கணவர் ஹேமந்த் பாதுகாப்பு கேட்டு போலீஸில் மனு கொடுத்துள்ளார்.

சித்ரா மரணம்
மேலும் சித்ராவின் மரணத்திற்கு மாஜி எம்எல்ஏ, மாஜி அமைச்சர், போதை மாஃபியா, சின்னத்திரை நடிகர் என 4 பேருக்கு தொடர்பிருக்கிறது என ஹேமந்த் குற்றம்சாட்டியுள்ளார். பெரம்பலூரில் துணிக் கடை ஒன்றை திறக்க சென்ற போதுதான் சித்ராவுக்கு மாஜி எம்எல்ஏவால் பிரச்சினை ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை
அவர்கள் யார் யார் என நான் போலீஸ் விசாரணையில் கூறுவேன். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என ஹேமந்த் தெரிவித்திருந்தார். இதனால் அந்த மாஜி அமைச்சர் யாரு, மாஜி எம்எல்ஏ யாரு என்பது குறித்து யூகங்கள் அடிப்படையில் நெட்டிசன்களாகவே ஒரு சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தனர்.

இன்ஸ்டாகிராம் பக்கம்
இந்த நிலையில் சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் டெலிட் செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்திற்கும் சித்ரா மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருந்திருக்கலாம். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புகைப்படங்கள் அழிப்பு
சைபர் கிரைம் போலீஸாரால் அந்த டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்களை மீண்டும் மீட்டெடுத்தால் அது இந்த வழக்கு விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று தெரிகிறது. போட்டோக்களை அழிக்கும் அளவுக்கு அப்படி என்னென்ன முக்கிய படங்களில் சித்ராவின் இன்ஸ்டாகிராமில் இருந்தன என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications