1 வருடத்திற்குள் கணவரை பிரிந்த பிரியங்கா நல்கரி.. சீரியலில் ஏற்பட்ட பிரச்சனை! அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: சன் டிவியில் ரோஜா சீரியல் மூலமாக பிரபலமான நடிகை பிரியங்கா நல்கரி கடந்த வருடத்தில் தான் அவருடைய காதலரை திருமணம் செய்திருந்தார். எளிமையாக நடைபெற்ற இவர்களுடைய திருமணம் இணையத்தில் அதிகமாக பேசப்பட்ட நிலையில் இப்போது பிரியங்கா கணவரை பிரிந்து விட்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
சமீபத்தில் ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தான். அவரிடம் ரசிகர்கள் நீங்கள் இப்போது சிங்களாக இருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்டிருக்கும் நிலையில் அதற்கு ஆமாம் என்று பிரியங்கா பதில் கொடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்து சீரியல்களில் ஒன்றுதான் ரோஜா சீரியல். இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தொடர்ச்சியாக இந்த சீரியலில் கதாநாயகியாக பிரியங்கா நல்கரி ரோஜா கேரக்டரில் நடித்து வந்தார். இதனால் இவருடைய பெயர் உண்மையான பெயர் பலருக்கும் தெரியாது ரோஜா என்றுதான் ரசிகர்களுக்கு தெரியும்.
இந்த நிலையில் தான் ரோஜா சீரியல் முடிவடைந்ததும் ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் பிரியங்கா நல்கரி தன்னுடைய திருமணத்தை செய்து முடித்து இருந்தார். ஏற்கனவே பிரியங்கா ராகுல் என்பவரை காதலித்து வந்திருந்த நிலையில் இவர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர்.
பிறகு இருவரும் மீண்டும் காதலிக்க தொடங்கி திருமணத்தை செய்திருந்தனர். இவர்களுடைய திருமணம் எளிமையாக முடிந்திருந்தது. இதனால் இருவருடைய வீட்டிலும் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்ற கேள்விகளும் எழுந்து வந்தது. இந்த நிலையில் அப்படியெல்லாம் இல்லை எங்களுடைய திருமணம் மலேசியாவில் நடைபெற்றது. அதனால் மிகப்பெரிய அளவில் குடும்பத்தினரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று பிரியங்கா விளக்கம் கொடுத்திருந்தார்.
இப்படியான நிலையில் திருமணத்திற்கு பிறகு சில நாட்களிலேயே சீதாராமன் சீரியலில் இருந்து பிரியங்கா விலகிவிட்டார். அதற்கு காரணம் கூட அவருடைய கணவர் தான் என்றும் கூறப்பட்டது. காரணம் சீரியலில் நடிப்பதற்காக பிரியங்கா சென்னைக்கு வந்திருப்பதாகவும் அவருடைய கணவர் மலேசியாவில் இருப்பதாகவும் இதனால் இவர்களுக்குள் ஒரு டிஸ்டன்ஸ் இருப்பதால் பிரியங்கா நடிப்பை விட்டு விலகியதாகவும் கூட கூறப்பட்டது.
ஆனால் சில மாதங்கள் கழித்து மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியல் மூலமாக பிரியங்கா மீண்டும் நடிக்க தொடங்கியிருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தன்னுடைய கணவர் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார். அதோடு கணவனோடு எடுத்த ரிலீஸ் வீடியோக்கள் என்று எல்லாவற்றையும் டெலிட் செய்திருக்கும் நிலையில் பிரியங்காவின் கணவர் ராகுலும் எல்லா புகைப்படங்களையும் டெலீட் செய்திருக்கிறார்.
இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்று கேள்விகள் எல்லோருக்கும் இருந்து வந்தது. இப்படியான நிலையில் தான் நேற்று பிரியங்கா நல்கரி தன்னுடைய ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் இப்போது சிங்கிளா என்று கேட்க அதற்கு ஆமாம் என்று பதில் கொடுத்து அதை தன்னுடைய ஸ்டோரியில் பிரியங்கா பகிர்ந்து இருக்கும் நிலையில் அவர் அவருடைய கணவரை உண்மையில் பிரிந்து விட்டார் என்று தெரிகிறது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது பற்றி வெளிப்படையாக பிரியங்கா நல்கரி அதில் தெரிவிக்கவில்லை.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications