Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் சர்ப்ரைஸ்..தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பறந்த உத்தரவு.. "இந்த" நாளை மறக்காதீங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, சார் பதிவாளர் அலுவலகங்களில் வழங்கப்படும் டோக்கன் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன.. எனவே, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அனைத்துமே, முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்ய வேண்டும்..

Additional tokens for Registration of deeds at Tamil Nadu Registrars offices on Aug 21

இதற்கு பிறகு, பத்திரங்களின் அடிப்படை சரிபார்ப்பு முடிந்த பிறகு விண்ணப்பதாரரின் விருப்பம் மற்றும் சார்பதிவாளரின் பணி அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டு, பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், தமிழ்நாட்டில் அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில், சில நாட்களுக்கு முன்பு ஆடி 18-ஐ முன்னிட்டு, பதிவுக்காக தரப்படும் டோக்கன்களில் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.. காரணம், ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி அதிகமாக ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது..

ஆடிப்பெருக்கு: அதாவது, ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன்பதிவு டோக்கன்கள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாயும் அன்றைய ஒரே நாளில் ஈட்டப்பட்டது. அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் 03.08.2023 அன்றைய தினம் ஈட்டப்பட்டதாக பத்திரப்பதிவு துறையும் மகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அடுத்த கோரிக்கை: இப்படிப்பட்ட சூழலில், ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.. இந்த கோரிக்கையை பதிவுத்துறை ஏற்றுள்ளது..

அதன்படி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆடிப் பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கடந்த 03.08.2023 அன்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

ஆவணி மாதம்: அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 14,449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. வரவிருக்கும் ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 21.08.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனை ஏற்று ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 21.08.2023 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும்..

தட்கல் முன்பதிவு: 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட வேண்டும்" என்று பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்று அதில் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+