Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛விபச்சாரி’ மகன் சர்ச்சை.. ஆ ராசாவ கூப்பிடுங்க நேருக்கு நேரா பேசுவோம்.. கொந்தளித்த நடிகை விந்தியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்'' என பேசி சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி ஆ ராசாவை அதிமுகவை சேர்ந்த நடிகையான விந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும், எம்பியாகவும் இருப்பவர் ஆ ராசா. அடிக்கடி சர்ச்சையாக பேசி வம்பில் மாட்டிக்கொள்வார். இவரது சமீபத்திய பேச்சு கூட இணையதளங்களில் வீடியோவாக வேகமாக பரவியது.

இந்த வீடியோவில் ஆ ராசா ‛‛இந்துவாக இருக்கும் வகை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை விபச்சாரியின் மகன்'' என பேசி சர்ச்சையை கிளப்பினார்.

விபச்சாரியின் மகனாக..

விபச்சாரியின் மகனாக..

இதுதொடர்பாக ஆ ராசா பேசுகையில் ‛‛நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்கள்?'' என்ற வகையில் பேசி இருந்தார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்த பேச்சுக்கு இந்து அமைப்பினர், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆ ராசாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு மத்தியில் ஆ ராசாவின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

விந்திவிந்தியா கொதிப்பு

விந்திவிந்தியா கொதிப்பு

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளரும், நடிகையுமான விந்தியா திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார். குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக பேசிய திமுக எம்பி ஆ ராசாவை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக நடிகை விந்தியா பேசியாதவது:

எதுக்கு அறநிலையத்துறை அமைச்சர்?

எதுக்கு அறநிலையத்துறை அமைச்சர்?

எங்களுக்கு எல்லாம் கடவுள் இருக்கிறார். நாங்கள் அனைவரும் இந்துக்கள் தான். திமுக, ஆ ராசாவை பொறுத்தவரைக்கு இந்துக்களே இல்லையென்று வைத்து கொண்டால் அந்த கட்சியில் சேகர்பாபு என்பவர் ஏன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும்?. இல்லாத ஒரு விஷயத்துக்கு எதுக்கு ஒரு அமைச்சர்? எதுக்கு ஒரு துறை? எதுக்கு ஒரு சம்பளம்?.

வரச்சொல்லுங்க பேசுவோம்

வரச்சொல்லுங்க பேசுவோம்

கலெக்சன், கமிஷன் என்று வந்தால் உங்களுக்கு வசதிக்கு ஏற்றபடி நடந்து கொள்வீர்களா?. யாரை ஏமாற்ற பார்க்கிறீங்க?. இந்துக்கள் என்றால் திமுகவுக்கு இழக்காரமாக போச்சு. ஆ ராசா பேச்சுக்கு எல்லாம் இங்கு பயப்படும் படியான ஆள் யாரும் கிடையாது. வரச்சொல்லுங்க பேசுவோம். இந்துத்துவா இருக்கா? இல்லையானு? ஒரே மேடையில் பேசுவோம். வரச்சொல்லுங்க ஆ ராசாவ'' என ஆக்ரோஷமாக கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+