அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்!
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி திடீரென தவெகவில் இணைந்தது ஏன் என்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக சிதறி சின்னாபின்னமாகிவிட்டதாக கூறிய அவர், அதிமுகவின் தோல்விக்கு கூட யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் சாடியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திடீரென தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார். ஓபிஎஸ் அணியுடன் நீண்ட ஆண்டுகளாக பயணித்து வந்த வெல்லமண்டி நடராஜன், திடீரென தேர்தலுக்கு முன் மீண்டும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினார். இருப்பினும் திருச்சியின் எந்த தொகுதியிலும் வெல்லமண்டி நடராஜனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதனால் வெல்லமண்டி நடராஜன் தரப்பு அதிருப்தியில் இருந்தது. இந்த நிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது சங்கடமாக உள்ளது.
அதிமுக 2 கோடி தொண்டர்களை கொண்ட எழுச்சிமிகு இயக்கம். ஆனால் சிதறி சின்னாபின்னமாகிவிட்டது. 11 தோல்வியை அதிமுக அடைந்துவிட்டது. இதற்கு காரணம் யார்? மீண்டும் அதிமுகவை அரியணையில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு என்னை சார்ந்தது என்று யாருமே சொல்லவில்லை. இளைஞர்களை ஊக்குவித்து அதிமுகவில் இணைக்கும் சக்தியாக எம்ஜிஆர் இருந்தார்.
ஆனால் அதிமுகவில் இப்போது யாராக இருந்தாலும் நீக்கப்படுகிறார்கள். இப்படி ஒவ்வொரு நபரையும் மைனஸ் செய்து கொண்டே வந்தால், அதிமுகவிற்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் சொல்கிறது. லோக்சபா தேர்தலில் 80 லட்சம் வாக்குகளை மட்டுமே அதிமுக பெற்றது. நாங்குநேரி இடைத்தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது.
எம்ஜிஆர், அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களை ஏற்றுக் கொண்ட தவெகவை மக்கள் ஆதரித்துள்ளார்கள். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தவெக வெற்றுள்ளது. மக்களால் விஜய் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா, பெரியார் ஆகியோரின் புகழை பாடக் கூடிய தலைவராகவே விஜய்யை பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
கொடுமை! குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு.. புகார் அளித்த வழக்கறிஞர் மீது தவெகவினர் தாக்குதல்












Click it and Unblock the Notifications