அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..இபிஎஸ் தலைமை..ஆலோசித்தது என்ன?
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அதன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற போதே ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் கலவரம் வெடித்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வான பின்னர், அவர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் முதல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக சட்டசபைக் கூட்டம் நடக்கும் முன்பாக, தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடக்கும். மாவட்ட செயலாளர்களை இணைத்து தற்போது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒற்றைத்தலைமை பிரச்சனை உச்சக்கட்ட மோதலில் உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் நாளுக்கு ஒரு பேட்டி அளித்து வரும் நிலையில் இன்றைய தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் , எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியது.

சட்டசபை கூடுகிறது
அக்டோபர் 17ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் கூடியது.

சபாநாயகர் மவுனம்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரும், துணை கொறடா பதவியிலிருந்து மனோஜ் பாண்டியனை நீக்கிவிட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை சபாநாயகர் அப்பாவு ஒப்புக்கொள்ளவில்லை.

சட்டசபையில் சமாளிப்பது எப்படி
ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் முடிவை சபாநாயகர் எதிர்பார்த்து, ஓ.பன்னீர் செல்வத்தை பதவியில் இருந்து நீக்காமல் இருக்கும்பட்சத்தில், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகியோர் சட்டசபைக்கு வந்தால் அவரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

அதிமுக பொன்விழா
அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள். இதற்காக மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலோசித்தது என்ன?
ஆலோசனை கூட்டத்திற்கு வரும் அனைத்து எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கோரிக்கையை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடிய போது ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த போது ஏற்பட்ட கலவரத்தை யாராலும் மறக்க முடியாது என்பதால் இன்றைய தினம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ராயப்பேட்டை ரணகளமாகுமா
ஆலோசனை கூட்டத்திற்கு வரும் அனைத்து எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கோரிக்கையை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடிய போது ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த போது ஏற்பட்ட கலவரத்தை யாராலும் மறக்க முடியாது. இன்றைய தினம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications