ஓபிஎஸ் வீட்டிற்கு வந்த தம்பிதுரை.. சமாதானமாகிறதா அதிமுக கூடாரம்.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கொண்டு வருவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் துரோகம். எல்லாம் சரியாகதான் சென்று கொண்டிருந்தது. திடீரென இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பேச தயார். இந்த பிரச்னையை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

AIADMK Rajya Sabha Member Thambidurai meeting with O.PanneerSelvam in Chennai

இதனைத்தொடர்ந்து இன்று காலை 4ஆவது நாளாக அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை வந்துள்ளார். அவர் நேற்று மாலை சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். தற்போது ஓபிஎஸ் உடன் தம்பிதுரை சந்திப்பு நடத்தி வருவது, சமாதான பேச்சுவார்த்தைக்காகவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+