அவ்வளவு பேசிய சரத்குமாருக்கு கடைசியில் ஒன்னே ஒன்னுதானா?.. அப்ப ராதிகா கதி??
சென்னை: ஒன்றிரண்டு தொகுதி கொடுத்தால் கூட்டணிக்கு வரமாட்டோம் என சரத்குமார் கூறியிருந்த நிலையில் தற்போது வெளியான உத்தேச பட்டியலை பார்த்தால் அவரது கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சிக்கு இரு இடங்களை ஜெயலலிதா ஒதுக்கினார். மேலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என கறார் காட்டினார்.
அதன்படி சரத்குமார் உள்பட இருவர் போட்டியிட்டு வென்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டு அவரது கட்சிக்கு ஓரிரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அவர் தோல்வியடைந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என கூறி வந்தார்.

தனி சின்னம்
அதே நேரத்தில் ஒன்று இரண்டு சீட்டுகளுக்கெல்லாம் நாங்கள் கூட்டணி வைக்க தயாராக இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என தெரிவித்திருந்தார்.

தொகுதி பங்கீடு
மேலும் கணவர் சரத்திற்கு அரசியலில் உதவி செய்ய, ராதிகா வெற்றிகரமாக கோலோச்சி கொண்டிருந்த சின்னத்திரையை விட்டு விலகினார். இவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என சரத்குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து ஒரு பட்டியல் இணையத்தில் உலா வருகிறது.

அதிமுக கூட்டணி
இதில் 171 இடங்களில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரே ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது திருவொற்றியூர் தொகுதியில் சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராதிகாவுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

சசிகலா
எனவே சரத்குமார் இந்த ஆஃபரை ஏற்க மாட்டார் என்றே தெரிகிறது. இதனால் அமமுக கூட்டணிக்கு சென்றாலும் செல்லலாம். சசிகலா தலைமையில் 3ஆவது அணி அமையும் பட்சத்தில் அந்த அணியில் இணைந்து கணிசமான தொகுதிகளை பெற்ற சரத்குமார் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications