சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்... அருமையான பந்து.. கோல் அடிக்காமல் கோட்டைவிடும் எடப்பாடியார்!
Recommended Video
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இஸ்லாமியர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுகிற அருமையான வாய்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நழுவவிட்டு வருகிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டுதான் நடைபெறும் என்றாலும் அதற்கான கோதாவில் அரசியல் கட்சிகள் குதிக்க தொடங்கிவிட்டன. இப்போதே கூட்டணிகள் எப்படியெல்லாம் அமையும்? ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்குமா? என்ற கேள்விகளுடன் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன.

ஆளும் அதிமுக அரசும், இதுவரை எப்படியோ, இனி மக்களிடம் பெயர் எடுக்க வேண்டும் என்பதற்கான வேலைகளில் முனைப்புகாட்டத் தொடங்கிவிட்டது. இதன் முதல் கட்டமாக காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதிரடி காட்டியதுதான். அதிமுக அரசின் இந்த அதிரடியை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அதிமுகவின் இந்த தடாலடியால் மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்புக்கு வேட்டு வைக்க எதிர்க்கட்சிகள் வைக்கும் வியாக்கியானங்கள் செல்லாதவையாகி வருகின்றன. இந்த நிலையில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் அதிமுக அரசுக்கு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. அதுவும் சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தேன்கூட்டில் கல்லெறிந்த கதையாகிவிட்டது. தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்கள் விடிய விடிய நடைபெறுகின்றன. இந்தப் போராட்டங்களின் ஒற்றை நோக்கமே தமிழக சட்டசபையில் சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான்.
இதனைத்தான் இன்று சட்டசபையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால் சபாநாயகர் தனபால் இதனை நிராகரிப்பதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மை மக்கள் அதிமுகவுக்கு எதிராக இருக்கின்றனர். இதனை உணர்ந்துதான் அதிமுகவும் பாஜகவிடம் இருந்து விலகியே இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் சிஏஏவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை தமிழக அரசு இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி இருந்தால் களநிலவரமே வேறாகவும் மாறி இருக்கும். திமுகவை நோக்கி போலரைஸ் ஆகி இருக்கும் இஸ்லாமியர் வாக்குகளில் சரிபாதியையாவது தங்கள் பக்கம் அதிமுக திருப்ப கிடைத்த அருமையான வாய்ப்பு இது. இதை எதற்காகவோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், சிஏஏ எதிர்ப்பு தீர்மானம், என்பிஆர் எதிர்ப்பு என அடுத்தடுத்து அதகளமாடி எதிர்க்கட்சிகளை அலறவிட கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டதே அதிமுக என்பது அரசியல் பார்வையாளர்களின் ஆதங்கம்.
-
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications