தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன் முடிவு தற்கொலைக்கு சமம்- அதிமுக சீனியர் தலைவர் செம்மலை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்திருக்கிறார். செங்கோட்டையனின் இந்த முடிவு, தற்கொலைக்கு சமம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செம்மலை விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நேற்றுவரை எந்த கட்சியில் இணைவார் என்று பேச்சுகள் அடிபட்டிருந்த நிலையில் இன்று தவெகவில் இணைந்திருக்கிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியுடனான உரசல், கட்சியிலிருந்து வெளியேற ஒரு காரணம் அவ்வளவுதான்.

அம்மா காலத்திலேயே இவர் கட்சியிலிருந்து விலக முயற்சி எடுத்திருந்தார். அரசியலில் சகிப்புத்தன்மை, நிதானம் வேண்டும். குறிப்பாக தலைமையை மதிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் பொறுமையாக இருந்தார். செங்கோட்டையனுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் செங்கோட்டையன் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இது ஒரு பத்திரிக்கை செய்தி அவ்வளவுதான். எனக்கு என்ன கேள்வி எனில், செங்கோட்டையன் விஜய்யிடம் அரசியல் கற்றுக்கொள்ளப்போகிறார? இவர் சொல்லிக்கொடுக்கப்போகிறாரா? நதி கடலில் கடக்கலாம். கடல் நதியில் கலக்கமா? இது தற்கொலைக்கு சமம். தற்கொலைக்கு முடிவெடுத்தவர்களை தடுத்து வைத்திருக்க முடியாது.
ஏற்கெனவே வளர்ந்த கட்சியில் இருந்துவிட்டு, இனி ஒரு கட்சியை வளர்க்கப்போகிறேன் என்று சொல்வது வேடிக்கை. தவெக தொண்டர்களுடன் ஒட்டவே முடியாது. வேண்டுமானால் தலைவர்களுடன் ஒட்டி உரசிக்கொண்டிருக்கலாம். அரசியல் வாழ்க்கை முடிந்துபோனது" என்று விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications