தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித்
சென்னை: தனது தாய் மோகினியின் இறுதிச் சடங்கிற்கு சிறப்பான வகையில் பாதுகாப்பு கொடுத்த காவல் துறையினரை கையெடுத்து கும்பிட்டு, நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்தார்.
நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி மணி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. அஜித் துபாயில் இருந்ததால் அவரது வருகைக்காக தாயின் இறுதி சடங்கு நேற்று நடைபெறவில்லை.

இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று சென்னை வந்த அஜித், தாயின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மேலும் இன்றைய தினம் பெசன்ட் நகர் மின்மயானத்தில் மோகினியின் இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அஜித்தின் தந்தை பாலக்காட்டு பிராமணர் என்ற முறையில் மோகினிக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. தன்னை 10 மாதம் சுமந்த தாயின் உடலை பெசன்ட் நகரில் கடைசியாக ஒரு முறை அஜித் சுமந்தார். அப்போது அவரது முகம் முழுக்க சோகமே காணப்பட்டது.
இதையடுத்து மின் மயானத்தில் மோகினியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தாய்க்கு தலை பிள்ளை என்பதால் அனில்குமார் இறுதி சடங்குகளை செய்திருப்பார் என தெரிகிறது.
மேலும் தனது தாயாரின் இறுதி சடங்கிற்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு அந்த துக்கத்திலும் அஜித் சிரித்தபடியே கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
இது போல் கடந்த 2023 ஆம் ஆண்டும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் இறப்பின் போதும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் சிறப்பான பாதுகாப்பு கொடுத்து தந்தையின் இறுதி சடங்குகளை செய்ய எந்த ஒரு இடையூறும் இன்றி உதவினர். அப்போதும் அஜித்குமார், போலீஸாருக்கும் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications