வணக்கம்.. வாங்க வாங்க.. கடு கடு காக்கிகளுக்கு மத்தியில்.. இனி சிரித்த முகத்துடன் வரவேற்பாளர்கள்!
சென்னை: காவல் நிலையங்களில் முதல் முறையாக புகார் அளிக்கச் செல்பவர்களை வரவேற்று தகவல் பதிவதற்காக வரவேற்பாளர்களை நியமிக்க தொடங்கியுள்ளது அரசு.
தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 912 வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறையில் பணியாற்றி பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு வரவேற்பாளர் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காவல் நிலையங்கள்
காவல் நிலையங்கள் என்றாலே அங்கு சிடுசிடுவென்ற முகத்துடன் காவலர்கள் இருப்பார்கள் என்பதும் புகார்கள் கொடுக்கச் சென்றால் அதை பதிவு செய்ய அலைக்கழிப்பார்கள் என்பதும் சினிமா படத்தை பார்த்து மக்கள் தங்களுக்குள் கட்டமைத்துள்ள ஒரு பிம்பமாக உள்ளது. இதன் காரணமாகவே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிப்பதை பலரும் தவிர்ப்பதோடும் மீறி புகார் அளிக்கச் செல்பவர்கள் ஒரு வித தயக்கத்தோடும் செல்கிறார்கள்.

இனி கவலை வேண்டாம்
இனி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுப்பது பற்றி கவலை வேண்டாம். உங்களை இன் முகத்தோடு வரவேற்று நடந்த விவரங்களை தகவலாக பதிவு செய்வதற்கு பிரத்யேக முறையில் ஆட்களை பணியமர்த்தியுள்ளது தமிழக அரசு. தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் ஆகிய இரண்டு பெயர்களில் பணியமர்த்தப்பட்டுள்ள நபர்கள் அன்போடு வரவேற்று சிரித்த முகத்துடன் பேசி உங்கள் புகார்களை பதிவு செய்வார்கள்.

கெஞ்ச வேண்டாம்
அதோடு மட்டுமின்றி காவல் நிலைய அலுவல் நடைமுறை பற்றியும் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகனும் நீ கூட வர்றீயா என யாரையும் துணைக்கு அழைத்து கெஞ்ச வேண்டிய தேவை இருக்காது. குறிப்பாக கிராமப்புற காவல் நிலையங்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் / வரவேற்பாளர் பணியிடங்கள் மிகுந்த உதவியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மானியக் கோரிக்கை
2021-22ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் வரவேற்பாளர் பணிநியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 912 பேருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்/பெண்
முதற்கட்டமாக 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள் காவல் நிலைய தகவல் பதிவு உதவியாளர் / வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே உள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வரவேற்பாளர்களின் பணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகார் கூற வருபவர்களை எவ்வாறு அணுகுவது, அவர்களிடம் கனிவாக நடந்துக் கொள்வது பற்றி தனிப்பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications