Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புறநகரில் "ஏசி"யால் வந்த பிஸி.. AC க்கு வந்த வாழ்வை பாருங்க.. வேற வழியில்லாம கிளம்பிட்டாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளிலும் ஏசி விற்பனை அதிகரித்து காணப்படுகிறதாம்.. கடந்த வருடத்தைவிட இந்த முறை ஏசி விற்பனை மும்மடங்கு அதிகரித்துள்ளதாம்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தவாறு காணப்படுகிறது.. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்து வருகிறது.. கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என்றும் கூறியிருந்தது..

Amazing AC sales in Tamil Nadu including Chennai Suburban and AC usages are increasing due to heat wave echo

தமிழகம்: நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வெயிலில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் வானிலை மையமும், சுகாதாரத்துறையும் மக்களை கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.. ஆனாலும் வெயில் சமாளிக்க முடியவில்லை.. எனவே, ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 மாவட்டகளுக்கு குறையாமல், வெயில் சதம் அடிப்பது இயல்பாகிவருகிறது.. இதில் பெரிதும் அதிர்ச்சியை தரக்கூடியது நீலகிரி மாவட்டம்தான்.. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெயில் தாங்காமல் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள் சுற்றுலா பயணிகள்.. ஆனால், ஊட்டியிலேயே வெயில் கொளுத்துவது அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தருகிறது.. ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது.

கோடை வெயில்: இந்த கோடை காலத்தை சமாளிக்கவும் முடியாமல், கடும் வெப்பமும், புழுக்கத்தையும் எதிர்கொள்ள முடியாமல், வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது... கரண்ட் பில் கலக்கத்தையும் மீறி ACயை இரவெல்லாம் ஓடவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், பெரும்பாலான குடும்பங்களில் புதிதாக ஏசி வாங்க ஆரம்பித்துவிட்டார்களாம்.. அனைத்து ஏசி கம்பெனிகளுக்குமே கடன் வசதி இருப்பதால், முன் தொகையை கட்டிவிட்டு, ஏசி வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

வசதி படைத்தவர்கள்: இதுவரை வசதி படைத்தவர்கள் மட்டுமே ஏசியை உபயோகித்துவந்த நிலையில், இப்போது, ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்... நகரம், கிராமம் என வித்தியாசமின்றி பெரும்பாலானோர் ஏசி வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்களாம்..

காரணம், வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் இரவில் கைக்குழந்தைகள் தூங்குவது கிடையாதாம்.. சில வீடுகளில் பிள்ளைகளின் வற்புறுத்தலுக்காகவே ஏசி வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக, கடைகளுக்கு திரண்டு செல்ல துவங்கியிருக்கிறார்களாம்..

மும்மடங்கு: எப்போதும் இல்லாமல், இந்த வருடம் குபீரென திரண்டு வரும் மக்களின் எண்ணிக்கையை கண்டு, ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு வித சலுகைகளை சொல்லி ஏசிகளை விற்றுவருகின்றனவாம். இதனால், பண்டிகை காலம் போலவே, ஏசி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறதாம்..

எப்படியும் வருகிற ஜூன் மாதம் வரை கடும் வெயில் இருக்கும் என்பதால், ஏ.சி. விற்பனை கடந்த வருடத்தைவிட, 3 மடங்கு அதிகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.. அப்படியே ஏ.சி.யை வாங்கினாலும் அதனை வீடுகளில் வந்து பொருத்துவதற்கு டைம் ஆகிறதாம்... முதல்முறையாக ஏசி பொருத்துபவர்களுக்கு, கரண்ட் பில் எப்படி வர போகிறதோ என்ற கலக்கமும் இப்பவே சூழ்ந்துள்ளதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+