திருவுடையம்மன் கண் திறந்தார்.. சென்னை திருவொற்றியூரில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னை திருவொற்றியூரில் அம்மன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு-வீடியோ
சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் அம்மன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூரில் பேசின் சாலையில் அமைந்துள்ள பழமையான கோயில் திருவுடை அம்மன் கோயில். இங்கு அம்மன் சிலை கண் திறக்கப்பட்டதாக பரபரப்பில் ஏராளமானோர் குவிந்தனர்.

பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் வடிவுடையம்மன், திருவுடையம்மன், கொடியுடை அம்மன் ஆகிய மூன்று அம்மன்களையும் ஒரே நாளில் தரிசிப்பது வழக்கம். இந்நிலையில் கார்த்திகை வெள்ளிக்கிழமையான நேற்று திருவுடையம்மன் கண் திறந்த நிலையில் இருப்பதாக கோயில் பூசாரி கூறினார்.

இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு அம்மனை தரிசிக்க சென்றனர்.
இதனால் அப்பகுதியில் திருவிழா போல் காட்சியளித்தது.












Click it and Unblock the Notifications