Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தைலாபுரம் இல்லத்திற்குச் சென்ற அன்புமணி.. ராமதாஸ் உடனான மோதலுக்கு பிறகு திடீர் விசிட்! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி சென்றுள்ளார். ராமதாஸ் உடனான முரண்பாட்டைத் தொடர்ந்து, தைலாபுரம் இல்லத்திற்கு செல்லாத அன்புமணி இன்று திடீரென அங்கு சென்றுள்ளார்.

பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இரு வேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அன்புமணி தரப்பு பாமக அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றனர்.

Anbumani Visits Thailapuram residence after Rift with Ramadoss

இதற்கிடையே மாம்பழம் சின்னம் மற்றும் கொடி அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று ஒதுக்கீடு செய்து அன்புமணியின் கட்சி அலுவலக முகவரிக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு செய்தார். அதில், கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டையே அணுகும்படி உத்தரவிட்டது. மீண்டும் ஐகோர்ட்டை நாடினார் ராமதாஸ். ராமதாஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அன்புமணி தரப்பு வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பு - சசிகலாவுடன் இணைந்து இந்த சட்டசபை தேர்தலைச் சந்திக்கும் நிலையில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி சென்றுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் சூழலில் நீண்ட நாட்கள் கழித்து இன்று தைலாபுரம் சென்றுள்ளார் அன்புமணி.

அன்புமணி இன்று கடலூருக்கு பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றார். அதற்கு செல்லும் வழியில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற அன்புமணி அவரது தாயார் சரஸ்வதியை சந்தித்து பேசிவிட்டு அங்கு உணவு அருந்தியுள்ளார். அதன்பிறகு அவர் கடலூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். தீவிர பிரச்சாரத்திற்கு இடையில், தைலாபுரம் தோட்டத்தில் தனது தாயாரை அன்புமணி சந்தித்தது கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+