Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தரமற்ற பள்ளிக் கட்டடங்களால்! தமிழகத்தில் இடைநிற்றல் சதவீதம் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரித்திருப்பதாக திமுக அரசு மீது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் இடை நிற்றல் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளி விவரம் வைரலாகி வருகிறது.

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான புதிய ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் கல்வி அமைப்பின் (UDISE+) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

annamalai bjp tamil nadu

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிக்கையில், ஆரம்பப் பள்ளி (1-5 வகுப்புகள்), நடுநிலைப் பள்ளி (6-8 வகுப்புகள்), மற்றும் உயர்நிலைப் பள்ளி (9-10 வகுப்புகள்) ஆகிய மூன்று நிலைகளிலும் இடைநிற்றல் விகிதங்கள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இடைநிற்றல் விகிதம் 2020-21 முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உச்சமாக, தலா 0% இருந்து முறையே 2.7% மற்றும் 2.8% ஆக உயர்ந்துள்ளது. உயர்நிலைப் பள்ளிகளில், இது 2023-24 இல் 7.7% ஆக இருந்து 2024-25 இல் 8.5% ஆக அதிகரித்துள்ளது. இது கல்வியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு.

2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுபோல, உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான ஜாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன. கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, பல மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், திமுக கட்சிக்காரர்கள் கட்டும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன. இது தவிர, முதலமைச்சர் திரு
@mkstalin
அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது. மேலும், தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.

இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+