ரோஜா மேடம் நீங்களா.. அன்னபூரணி அம்மா அரசை பார்த்து ஷாக்கான பக்தர்கள்! எல்லாமே செம்புங்க மக்களே!
சென்னை : திரைப்பட நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தலையில் கிரீடம் கையில் சூலாயுதம் என மீண்டும் வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி செய்து வரும் அன்னபூரணி அரசு அம்மா மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறார்.
Recommended Video
நித்தியானந்தா, பிரேமானந்தா உள்ளிட்ட போலிச் சாமியார்களின் வரிசையில் தற்போது தமிழகத்தில் அதிக அளவு மக்களால் பேசப்படும் நபராக இருப்பவர் அன்னபூரணி அரசு அம்மா.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் அவதாரம் தான் எனக் கூறி திடீரென பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குவதாக விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் அவர் யார் என்ன செய்கிறார் என்பது குறித்து விசாரித்த போது தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அன்னபூரணி அரசு அம்மா
நன்றாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் மக்களை அழைத்து வந்து அமர வைத்து பஞ்சாயத்து செய்து உலகம் முழுவதும் பிரபலமாக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு கணவன் பஞ்சாயத்து குறித்து பேசிய அன்னபூரணி தான் அவர் என்பதனை கண்டுபிடித்த சமூக வலைதளவாசிகள் அவரை ட்ரோல் செய்ய தொடங்கினர்.

ஆன்மீக சேவை
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆன்மிகத்தை பக்தர்களுக்கு வாரி வழங்கியே தீருவேன் என அடம் பிடித்து ஆன்மீக சேவை செய்து வருகிறார். அன்னபூரணி அரசு அம்மா. போதாக்குறைக்கு நித்தியானந்தா ஏற்கனவே ஆசிரமம் வைத்திருந்த ஆன்மீக பூமியான திருவண்ணாமலையிலேயே ஒரு இடத்தை வாங்கி அதில் கொட்டாய் அமைத்து பக்தர்களுக்கு ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார். மேலும் அடிக்கடி பரவச நிலையில் தான் இருப்பதாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

ஆசிரமம்
போதாக்குறைக்கு நித்தியானந்தாவை போலவே அருள் ஆசி உரைகளும் தீட்சை வழங்கும் நிகழ்ச்சிகளும் அங்கு அரங்கேறி வருகிறது. பேஸ்புக்கிலும் பக்கம் பக்கமாக ரைட்டர் எழுதி வரும் அன்னபூரணி அடிக்கடி கடவுளை சந்தித்து வருவதாகவும் உடல் என்னும் மாயையை தாண்டி கடவுள் நிலைக்கு தான் உயர்ந்து விட்டதாக புருடாக்களை அள்ளி வீசி வருகிறார் அதனை நம்பி ஒரு கூட்டம் அவர் பின்னால் செல்லத்தான் செய்கிறது.

நெட்டிசன்கள் கிண்டல்
இந்த நிலையில் தான் அன்னபூரணி அரசு அம்மா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தலையில் கிரீடம் கையில் சூலாயுதம் என பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட நடிகை ரோஜா ஒரு சுவாமி படத்தில் நடித்த கெட்டப்பில் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். தலையில் தங்க கிரீடத்தை அணிந்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பி நிலையில் அது வெறும் செம்பு என்பது தெரிய வந்திருக்கிறது மேலும் கையில் வைத்திருக்கும் சூலாயுதம் உண்மையா அல்லது அட்டையா என சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications