Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் அதிரடி..ஏற்கனவே பாட்டில் விலை "சர்னு" ஏறிடுச்சு..இப்ப இது வேறயா..அந்த 10 ரூபாய் "இடிக்குதே"

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், புது பகீர் ஒன்று கிளம்பி உள்ளது.. என்ன சொல்கிறார்கள் குடிமகன்கள்?
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு கொட்டி கொண்டிருக்கிறது.. மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

Are these Major reasons for Tasmac liquor price hike by Tamil nadu Government and Complaint about Rs10, quart Bottles

வருவாய்: இப்போதைக்கு மொத்தம் 4829 மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.

இதனிடையே, அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை பெருக்குவதற்காகவும், டாஸ்மாக் மதுபானங்கள் விலைகளும் கடந்த 1ம்தேதி முதல் உயர்த்தப்பட்டிருக்கின்றன.. இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்தால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்தவகையில், 10 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை அளவுக்கு ஏற்ப மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

10 ரூபாய்: எனினும், ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறதாம்.. இதனை தடுப்பதற்காகத்தான், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுக்கடைகள் முன்பு "விலை பட்டியல்" நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைகளில் அதனை அமல்படுத்தாமல் இருக்கிறார்களாம்.. விற்பனையாளர்களும் ஆங்காங்கே 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து கொண்டேயிருக்கிறார்களாம்.

பாட்டில் விலை: குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் கொந்தளிக்கிறார்கள். அரைபாட்டில் மதுபானத்தை கேட்டால், 2 குவார்ட்டர் பாட்டிலை தருகிறார்களாம். காரணம், 2 குவார்ட்டர் பாட்டிலை கொடுத்தால், ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கலாம்.. ஆனால் அரை பாட்டிலுக்கு ரூ.10 மட்டுமே வசூலிக்க முடியும். அதனால்தான், குவார்ட்டர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு, மறைமுகமாக விற்பனையாளர்கள் வருவாயை பார்ப்பதாக சொல்கிறார்கள்.

இதனால், குவார்ட்டர் மது பாட்டில்கள் 70 சதவீதம் அளவுக்கு விற்பனையாகுவதாகவும் அரை பாட்டில் மதுபானங்கள் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடவடிக்கை: ஆனால், இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் சொல்லும்போது, "மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்பதற்காகத்தான், கடைகளின் முன்பு விலை பட்டியலை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. கூடுதலாக விற்கப்படுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.. எனவே, குடிமகன்கள் விலை பட்டியலில் உள்ள பணத்தை மட்டுமே கொடுத்தால் போதும்" என்றனர்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+