Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிரட்டும் அசானி... சென்னையில் கொட்டும் மழை... வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்

சென்னையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய அசானி தீவிர புயல்‌ இன்று புயலாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம்‌ அருகே மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவுகிறது. இது வடக்கு-வடகிழக்கு திசையில்‌ வட ஆந்திரா கடலோர பகுதிகளின்‌ வழியாக நகர்ந்து, இன்று இரவு மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவக்கூடும்‌. இது அடுத்த 24 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கூடும்‌.

இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இடி மின்னலுடன் மழை

இடி மின்னலுடன் மழை


நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையில் மிதமான மழை

சென்னையில் மிதமான மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்றைய தினம் மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 75 முதல்‌ 85 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 95 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. சூறாவளி காற்றின்‌ வேகம்‌ படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

சூறாவளிக்காற்று

சூறாவளிக்காற்று

ஆந்திரா கடற்கரை பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 70 முதல்‌ 80 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 90 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. சூறாவளி காற்றின்‌ வேகம்‌ படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 66 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.
ஓரிசா கடற்கரை மற்றும்‌ அதனை ஓட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள் செல்ல வேண்டாம்

மீனவர்கள் செல்ல வேண்டாம்

நாளைய தினம் ஒரிசா கடற்கரை மற்றும்‌ அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

கரை திரும்ப உத்தரவு

கரை திரும்ப உத்தரவு

நாளை மறுநாள் மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. ஆழ்‌ கடலில்‌ உள்ள மீனவர்கள்‌ உடனடியாக கரை இரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.‌

Recommended Video

    #BREAKING அசானி புயல் எதிரொலியாக சென்னையில் விமான சேவை பாதிப்பு!
     சென்னையில் பலத்த மழை

    சென்னையில் பலத்த மழை

    இதனிடையே வானிலை மையம் கணித்தது போல சென்னையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை தண்டையார்ப்பேட்டை, வண்ணராப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+