சென்னையில் ஐஎஸ் பயங்கரவாதிகளை தேடும் என்ஐஏ! ராமேஸ்வரம் கபே கேஸ் முடிச்சு அவிழ்கிறது?
சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளின் தேடுதல் வேட்டை சென்னையில் தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான 2 பேர் சென்னையில் தங்கி இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி,வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் கைதான 2 பேருக்கு உதவியவர்களை சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெங்களூரில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி திடீரென்று குண்டு வெடித்தது. சம்பவத்தன்று மதியம் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் உணவுகள் பரிமாறப்பட்டன.

அப்போது திடீரென்று மர்மபொருள் வெடித்தது. ஓட்டலில் கைகழுவும் இடத்தின் அருகே இருந்து மர்மபொருள் வெடித்தது. அந்த பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது அது வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மற்றும் தடயவியல் துறையினர், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உணவகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு இந்த வழக்கு என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில்தான் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், பயங்கரவாதிகள் முசாவிர் ஹுசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மதீன் அகமது ஆகியோருக்கும், குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
30 வயதான அப்துல் மதீன் முகமது தாஹா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கியிருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு 10 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் விசாரணையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. அப்துல் மதீன் முகமது தாஹாவின் வாக்குமூலத்தின்படி, 2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு முக்கிய இந்து தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்படாமல் தப்பித்தார். தேடப்பட்ட நபராக இருந்த அப்துல் மதீன் அகமது தாஹா, கோவை, மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
மேலும் இளைஞர்களுக்கு ஆயுதம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்ததும், அவர்களை பயங்கரவாதிகளாக்கி ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பதில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் விசாரணையில், சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த 33 வயது நபர், ஷாகிப் மற்றும் தாஹா ஆகியோரின் முக்கிய கூட்டாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதோடு வடடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். குண்டுவெடிப்புக்குப் பிறகு குற்றவாளிகள் இருவரும், கொல்கத்தாவுக்கு தப்பிச் செல்ல உதவியதில் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது இவர் தப்பி ஓடிவிட்டார். அவரை என்ஐஏ அதிகாரிகள் சென்னை உள்பட பல இடங்களில் தேடிவருகின்றனர்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications