வங்கி கடன் பெற லஞ்சம்- அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு ஜெயில்!
சென்னை: வங்கி கடன் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
ஶ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் 2014-ல் போட்டியிட்டு வென்றவர் அதிமுகவை சேர்ந்த ராமச்சந்திரன். இவர் தமது பொறியியல் கல்லூரிக்கு வங்கியில் கடன் பெற்றதில் மோசடி நடைபெற்றது என்பது சிபிஐ வழக்கு.

சென்ட்ரல் வங்கியில் ரூ20 கோடி கடன் பெற்றார் ராமச்சந்திரன். இதற்கு லஞ்சமாக வங்கி மேலாளர் தியாகராஜன், அமெரிக்கா சென்று வருவதற்காக ரூ2.69 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்தார் ராமச்சந்திரன் என சிபிஐ வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமச்சந்திரன், அவரது மகன் மற்றும் சென்ட்ரல் வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரவன், அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை கேட்டதும் வங்கி மேலாளர் தியாகராஜன், நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications