பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா அவசியம்.. மத்திய அரசு சூப்பர் திட்டம்.. கேஸ் சிலிண்டர் வீடு தேடி வருதே
சென்னை: வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றி தெரியுமா? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் பலனை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன? இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? அதேபோல, எல்பிஜி சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் வழங்கப்படும் விபத்துக் காப்பீட்டினை பெறுவதற்கான முறைகள் என்னென்ன தெரியுமா பெண்கள் பெறக்கூடிய திட்டமான, உஜ்வாலா திட்டத்திற்கு, அளிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
இந்தியாவில் பெண்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஏராளமான நலத்திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. அதில் ஒன்றுதான், "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" திட்டமாகும்..

இதன்மூலம், பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசு 2016ல் இந்த திட்டத்தை ஆரம்பித்ததுடன், இத்திட்டத்தை பெறுவதற்கான சில தகுதிகளையும், அளவுகோல்களையும் நிர்ணயித்து.. அதன்படி உஜ்வாலா திட்டத்தின் பலனை கோடானு கோடி பேர் பெற்று வருகிறார்கள்.
தகுதிகள், பலன்கள்
குறிப்பாக உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலன்களை பெற்று வரும் பெண்கள், இலவச கேஸ் சிலிண்டரின் பலன்களையும் பெற முடியும், வறுமைக்கோட்டுக்கு கீழே குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்கள், 18 வயது பூர்த்தியாகியிருந்தாலே இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், கேஸ் சிலிண்டர் இணைப்பு எதுவும் இதுவரை பெற்றிருக்கக்கூடாது.
இந்த திட்டத்தை பெற, E-KYC இணைப்பும் அவசியமாகும்.. ஆனால், அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.. மற்றவர்கள் அனைவருமே, ஆதார் அட்டை, முகவரி சான்றிதழ், ரேஷன் கார்டு, பயனாளி, வங்கிக் கணக்கு எண், வங்கியின் IFSC மற்றும் குடும்பத்தின் நிலையை உறுதிப்படுத்தும் துணை KYC, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதி சான்றிதழ், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
PM உஜ்வாலா யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம்
- https://pmuy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைந்து, Apply For New Ujjwala 2.0 Connection என்ற ஆஷ்பனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு கேஸ் நிறுவனங்களிடமிருந்து சிலிண்டர் பெறுவதற்கான இணைப்பிற்குள் சென்று, உங்களது பெயர், முகவரி, செல்போன் நம்பரை செல்போனையும் எண்ணை நிரப்ப வேண்டும்.
பிறகு PIN நம்பரை பதிவிட்டுவிட்டு, கையிலுள்ள ஆவணங்களை அப்லோடு செய்து, 'Apply' பட்டனை கிளிக் செய்தால் போதும். உங்கள் விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு சிலிண்டர்களை வழங்குவார்கள்.
பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் என மொத்தம் 7 பிரிகளின் கீழுள்ளவர்கள் இதன் பலனை பெறலாம்.
சிலிண்டர் வெடிப்புகள்
கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது.. கேஸ் லீக்கேஜ் , சிலிண்டர் வெடிப்புகள் நடந்துவிட்டால், கஸ்டமர்களுக்கு இந்த காப்பீடு கிடைக்கும்.. ஆனால், இதற்கு எந்த தொகையும் முன்னதாக கஸ்டமர்கள் செலுத்த தேவையில்லை.
இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐசிஐசிஐ லம்பார்டு போன்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருக்கின்றன. உதாரணத்துக்கு எல்பிஜி சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர் ரூ.50 லட்சம் வரை காப்பீட்டு தொகையை பெறலாம்.. காயமடைந்த ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கிடைக்கும்,.
இந்த காப்பீட்டை பெற, சிலிண்டர் வழங்கும் முன்பு டீலர் அதை முறையாக பரிசோதிக்க வேண்டும்.. விபத்து நடந்து 30 நாளைக்குள் கஸ்மர்கள் எல்பிஜி நிறுவனம் மற்றும் அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு விபத்து குறித்து தெரிவிக்க வேண்டும்.
சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு எப்ஐஆர் காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் போன்றவை ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும், கேஸ் நிறுவனங்களே காப்பீடு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அனைத்தையும் செய்து தரும்..
ஆனால், சிலிண்டர் பைப், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர் போன்றவை அனைத்தும் ISI முத்திரை உள்ள நபர்களுக்கு மட்டுமே இழப்பீடு தொகை கிடைக்கும்.. அதிலும், சிலிண்டர் யாருடைய பெயரில் உள்ளதோ அவருக்கு மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என்பது நினைவுகூரத்தக்கது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
மறுபடியும் அடுப்பு தான் ஊதனுமா? இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! மத்திய அரசு எடுத்த முடிவு! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications