உயில் எழுத போறீங்களா? இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க.. வாரிசு இல்லாத சொத்துக்கள் யாருக்கு சேரும்? ஓஹோ
சென்னை: உயில் எழுதும்போது, விவாகரத்தாகி, மறுமணம் செய்து கொள்ளாத பெண்ணின் மகனுக்கு, கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா? வாரிசு இல்லாத சொத்து யாருக்கு போகும்? என்ற சந்தேகங்கள் பரவலாக உள்ளது.
உயில் எழுதுவதென்பது, ஒருவரின் அடிப்படை உரிமையாகவும், அவரது கடைசி ஆசையாகவும் கருதப்படுகிறது. உயில் எழுதியதுமே, நம்பிக்கைக்குரிய 2 பேரிடம் தெரிவித்து வைப்பது நல்லது. இதனால், உயிலானது உரியவர்களிடம் உரிய நேரத்தில் வந்து சேரும்.

உரிமை கோர முடியுமா: 18 வயது நிரம்பிய யாரும் தங்களுடைய சொத்துகளை உயிலாக எழுத முடியும். சில காரணங்களின்போது மட்டும் 21 வயது நிரம்பியவர்தான் உயில் எழுத முடியும். உயில் எழுதியவர் இறந்த பிறகு, உயிலில் குறிப்பிட்ட சொத்து விற்கப்பட்டிருந்தால் சொத்து வாங்கியவரிடம் உயிலின் பேரில் கோர முடியாது.
உயிலை எழுதியதுமே, அதை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், நாளடைவில் உறவுகளுக்குள் தேவையில்லாமல் சிக்கல்கள், குழப்பங்கள் எழுவதை இது தடுக்க உதவும். அதேபோல, உயிலின் நகலை பதிவு அலுவலகத்தில் கொடுத்துவிடுவது இன்னும் சிறந்தது. உயிலுக்குரிய சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறதோ, அங்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும்..
ஆண் வாரிசுகள்: ஒருவர் தன்னுடைய சொத்துக்களை, உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அந்த சொத்துக்கள் அவருடைய ஆண் வாரிசுகளுக்குதான் நேடியாக போய் சேரும். ஒருவேளை அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லாவிட்டால், அம்மா வழி அல்லது அப்பா வழி சொந்தங்களுக்கு சொத்துக்கள் போய் சேரும்... அந்தவகையில் இறந்த நபரின் அம்மாவிற்கும் இந்த சொத்தில் பங்கு உண்டு.. இறந்தவரின் மனைவிக்கும் சொத்தில் பங்கு இருக்கிறது.
அதேபோல, வாரிசுக்கு உயில் எழுதி வைக்கும்போது, மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதினால் நல்லது. அல்லது வாரிசுதாரரையே நாமினியாக நியமித்துவிட்டால், எதிர்காலத்தில் தேவையில்லாத சிக்கல்கள் எழ வாய்ப்பிருக்காது.
கணவனின் சொத்து: உயில் எழுதும்போது, விவாகரத்தாகி, மறுமணம் செய்து கொள்ளாத பெண்ணின் மகனுக்கு, கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழும்.
வாரிசுரிமை சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கிருக்கிறது.. இதில் விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் மறுமணம் புரிந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது.
வாரிசு இல்லாதோரின் சொத்து: அதேபோல வாரிசு இல்லாத சொத்து யாருக்கு போகும்? என்ற சந்தேகமும் உள்ளது. வாரிசு இல்லாத ஒருவர் சுயவிருப்பத்தின்பேரில், தன்னுடைய சொத்துக்களை உயில் மூலம், தான் விரும்பும் நபர் யாருக்கு வேண்டுமானாலும் வாரிசு இல்லாதவர்களுக்கு தத்துப்பிள்ளைகளும் இல்லாதபோது, உயில் எழுதிய நபரையே மொத்த சொத்துக்களும் சேரும்.
எனவே, கணவன் மனைவி இறந்தபிறகு வாரிசு இல்லாதவர்களின் சொத்துக்கள், அவர்களின் 2ம் நிலை வாரிசுதாரர்களுக்கே சொந்தம்.. அதாவது, கணவருடன் பிறந்த சகோதரர், மற்றும் சகோதரிகள், மற்றும் மனைவியுடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுக்கு சொந்தமாகும்.
பங்காளி வாரிசுகள்: அதேசமயம், இறுதி காரியம் செய்யும் நபருக்கும் சொத்தை பயன்படுத்தும் உரிமை இருக்கிறது. அதனால்தான் சிலர், பங்காளி வாரிசுகளை இறுதி காரியம் செய்ய விடுவதில்லையாம்.
வாரிசுகள்: அதேபோல, தனக்குரிய சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியும்.. பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது.. பிரித்து தரவும் முடியாது..
வாரிசு இருந்தாலும்கூட, அவர்களுக்கு சொத்து எழுதி வைக்காமல், பிறருக்கும் எழுதி வைக்கலாம். . அல்லது டிரஸ்ட்களுக்கும் சொத்துக்களை எழுதி வைக்கலாம்.. அப்படி எழுதி வைத்தால், வாரிசுகளால் அதை எதிர்க்க முடியாது.. வாரிசுகளுக்கு எழுதி வைத்தால், அந்த சொத்து மனைவிக்கு கிடைக்கும் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வளவு செய்தாலும், அவரது மரணத்துக்கு பிறகே இது உயிலாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications