நகர்ப்புற வாழ்விடங்களில் பெரிய மாற்றம்! TNUHDB குடியிருப்புவாசிகளுக்கு ரூ.72.73 கோடி டபுள் சர்ப்ரைஸ்
சென்னை: சென்னை நகர்ப்புற வாழ்விடங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ரூ.72.73 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு மற்றும் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... இதுகுறித்த சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.. அதில் உள்ள அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுகிறது.

இந்த வாரியமானது, நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மானிய விலையில் வீடுகளை வழங்குவதிலும் செயல்படுகிறது..
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
குறிப்பாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) போன்ற மத்திய அரசுத் திட்டங்களுடன் இணைந்து, வீடில்லா மக்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற உதவுகிறது. அதேபோல், மறுவாழ்வு திட்டங்கள் மூலம் குடிசைப் பகுதிகளில் இருந்து இடம்பெயர வேண்டிய மக்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் புதிய வாழ்வாதார சூழல் உருவாக்கப்படுகிறது.
குடிநீர், மின்சாரம், கழிப்பறை, கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன,.. குடிசை அகற்றம் காரணமாக இடம்பெயரும் மக்களுக்கு மறுவாழ்வு குடியிருப்புகள் வழங்கப்படுகின்றன. நகர்ப்புற பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் போன்ற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள்
பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற சமூக வசதிகளும் உருவாக்கப்படுகின்றன. பாதுகாப்பான வீடுகள் கிடைப்பதால் மக்களின் உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்பு மேம்படுகிறது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் சமநிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.
பெண்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கிறது.... சட்டபூர்வமான வீட்டு உரிமை கிடைப்பதால் குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பும், பொருளாதார நிலைத்தன்மையும் கிடைக்கிறது...
சென்னை மாநகராட்சி
இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 127 திட்டப் பகுதிகளில் ரூ.72.73 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி தற்போது தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது..
அதில், "மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதிகளில் தூய்மையாகப் பராமரிக்கும் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 74 குடியிருப்புப் பகுதிகளில் ரூ.15.11 கோடியில் 15,039 மீட்டர் நீளமுள்ள 37 தார்ச் சாலைகள், 11 பேவர் பிளாக் சாலைகள், 56 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் என மொத்தம் 104 சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சமூக உள்கட்டமைப்பை வலுப்படுத்த 37 குழந்தைகள் மையங்கள், 15 நியாய விலைக் கடைகள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஓர் அம்மா உணவகம் மற்றும் சுற்றுச்சுவர்கள் ஆகியவற்றில் ரூ.13.33 கோடியில் புதுப்பித்தல், பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடியிருப்புவாசிகளுக்கு டபுள் சர்ப்ரைஸ்
ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை மேம்படுத்த 9 பூங்காக்கள் மற்றும் 2 விளையாட்டு மைதானங்கள் ரூ.98.99 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.10.85 கோடியில் 123 குடியிருப்புப் பகுதிகளில் மொத்தம் 1,476 விளக்கு கம்பங்கள், 9 உயர் கோபுர மின்விளக்குகள், 2,782 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும் ரூ.32.45 கோடியில் 173 குடியிருப்புப் பகுதிகளில் 1,22,014 குடியிருப்புகள் பயனடையும் வகையில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1,325 தூய்மைப் பணியாளர்கள் இப்பணியில் உள்ளனர். 406 குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications