Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாக காலியாகிடும்.. உஷார்.. அலறும் அதிமுக மா.செக்கள்.. எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளதாம்.

லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.

Biggest problem in AIADMK for Edappadi Palanisamy ahead of Lok Sabaha elections

40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் மொத்தம் 20 புதிய தலைகள் களமிறக்கப்படலாம் என்கிறார்கள். அதாவது திமுகவில் இருந்து 10 புதிய தலைகள், மற்ற கூட்டணி கட்சிகளில் இருந்து 10 புதிய தலைகள் என்று மொத்தம் 20 பேர் களமிறக்கப்படுவார்கள். திமுகவில் எம்பியாக இருக்கும் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே திமுக தொடங்கி தீவிரமாக நடத்தி வருகிறது.

பிரஷர்: திமுக ஒரு பக்கம் பணிகளை செய்ய இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பிரஷர் ஒன்று வந்துள்ளதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி முக்கிய கண்டிஷன் போட்டுள்ளாராம். திமுக இந்த தேர்தலில் வலுவாக உள்ளது. அவர்களை எதிர்க்க ஒரே வழி அதிக காசு இறக்க வேண்டும். 20 கோடிக்கு மேல் பணம் இறக்க முடிந்தவர்கள் மட்டும் தேர்தலில் நிற்கலாம் என்று ஆர்டர் போட்டுள்ளாராம்.

இதன் அடிப்படையில் அவர் வேட்பாளர் லிஸ்டை தயார் செய்ய ரெடியாகிவிட்டாராம். ஆனால் மாவட்ட செயலாளர்களோ மாஜி அமைச்சர்கள் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இரண்டு தொகுதி வீதம் ஒவ்வொரு மாஜி அமைச்சரும் செலவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனராம்.

ஆனால் மாஜிக்களோ.. இப்போது எம்பி தேர்தலில் வென்று என்ன செய்ய போகிறோம். பெரிதாக பலன் இல்லாத தேர்தலுக்கு ஏன் செலவு செய்ய வேண்டும் என்று விட்டேத்தியாக இருக்கிறார்களாம். இரண்டு தரப்பிற்கும் நடுவில் சிக்கிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரஷர் ஏறிவிட்டதாக கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

மோதல்; அதிலும் சில மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணிகளை செய்வதிலேயே ஆர்வம் காட்டவில்லையாம். பாஜக கூட்டணி இல்லாமல் தனியாக நின்றால் கண்டிப்பாக வாக்கு பிரியும். இதனால் தோல்வியே மிஞ்சும். திமுக மீது விமர்சனங்கள் இருந்தாலும் இப்போதும் அந்த கட்சி வலுவாகவே இருக்கிறது.

எனவே இதை சரி செய்ய ஒரே தீர்வு.. பாஜக கூட்டணியை மீண்டும் கொண்டு வருவது. இல்லையென்றால்.. நமக்குத்தான் தேவையில்லாத செலவு. பல கோடி ரூபாய் இதனால் வேஸ்ட் ஆகிவிடும். சரியாக லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் இதனால் டென்ஷன் ஏற்பட்டு உள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+