பீகார் இளைஞர் கொல்லப்பட்டது தரமணியில்.. உடல் இருந்தது அடையாறு! கொலையாளிகளின் கொடூர திட்டம் அம்பலம்!
சென்னை: பீகாரைச் சேர்ந்த கவுரவ் குமாரின் குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில், கொலையாளிகள் திட்டமிட்டு உடலை வேறு வேறு இடத்தில் வீசி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. தரமணியில் கொலை செய்துவிட்டு, அந்த உடலை சுமார் 5 கிமீ தூரம் பயணித்து அடையாறு ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கவுரவ் குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களின் 2 வயது மகனுடன் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளனர். இதில் கவுரவ் குமாருக்கு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டி வேலை கிடைத்திருக்கிறது. இதன்பின் மனைவி மற்றும் குழந்தையுடன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலேயே கவுரவ் குமார் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்பில் தனியாக இருந்த பீகார் இளைஞரின் மனைவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி உடனடியாக அலறி இருக்கிறார். இந்த அலறல் சத்தம் கேட்டு உடனடியாக பீகார் இளைஞர் கவுரவ் குமார் அங்கு வந்திருக்கிறார். அப்படி வந்தவகள் மர்ம கும்பல் தாக்கி இருக்கிறது.
இதன்பின் கவுரவ் குமாரின் மனைவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை தடுக்க வந்த கவுரவ் குமாரை அந்த கும்பல் அடித்தே கொலை செய்திருக்கின்றனர். இதன்பின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுத 2 வயது குழந்தையையும் அந்த குடும்பல் கொடூரமாக கொலை செய்திருக்கிறது. இந்த கொடூர கொலையை செய்துவிட்டு இளைஞரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு அடையாறு இந்திரா நகர் ஆற்றங்கரையோரம் வீசியுள்ளனர். அதேபோல் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கவுரவ் குமாரின் நண்பர்கள் உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் அவரது நண்பர்களே கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஷ், சிக்கந்தர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொடூரமாக ஒரு குடும்பத்தை கொலை செய்துவிட்டு தப்பிப்பதற்காக அந்த கும்பல், உடலை வேறு இடத்தில் வீசி சென்றிருக்கின்றனர். அதாவது தரமணியில் கொலை செய்துவிட்டு, கவுரவ் குமார் மற்றும் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர். இதற்கு இடையில் மட்டும் சுமார் 5 கிமீ தூரம் உள்ளது.
இதனால் அந்த கும்பல் திட்டமிட்டே இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தகவல் கூறுகின்றனர். அதேபோல் மனைவியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. அவரது உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications