Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார் இளைஞர் கொல்லப்பட்டது தரமணியில்.. உடல் இருந்தது அடையாறு! கொலையாளிகளின் கொடூர திட்டம் அம்பலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகாரைச் சேர்ந்த கவுரவ் குமாரின் குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில், கொலையாளிகள் திட்டமிட்டு உடலை வேறு வேறு இடத்தில் வீசி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. தரமணியில் கொலை செய்துவிட்டு, அந்த உடலை சுமார் 5 கிமீ தூரம் பயணித்து அடையாறு ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கவுரவ் குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களின் 2 வயது மகனுடன் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளனர். இதில் கவுரவ் குமாருக்கு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டி வேலை கிடைத்திருக்கிறது. இதன்பின் மனைவி மற்றும் குழந்தையுடன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலேயே கவுரவ் குமார் வசித்து வந்துள்ளார்.

Bihar Family Murder

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்பில் தனியாக இருந்த பீகார் இளைஞரின் மனைவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி உடனடியாக அலறி இருக்கிறார். இந்த அலறல் சத்தம் கேட்டு உடனடியாக பீகார் இளைஞர் கவுரவ் குமார் அங்கு வந்திருக்கிறார். அப்படி வந்தவகள் மர்ம கும்பல் தாக்கி இருக்கிறது.

இதன்பின் கவுரவ் குமாரின் மனைவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை தடுக்க வந்த கவுரவ் குமாரை அந்த கும்பல் அடித்தே கொலை செய்திருக்கின்றனர். இதன்பின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுத 2 வயது குழந்தையையும் அந்த குடும்பல் கொடூரமாக கொலை செய்திருக்கிறது. இந்த கொடூர கொலையை செய்துவிட்டு இளைஞரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு அடையாறு இந்திரா நகர் ஆற்றங்கரையோரம் வீசியுள்ளனர். அதேபோல் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கவுரவ் குமாரின் நண்பர்கள் உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் அவரது நண்பர்களே கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஷ், சிக்கந்தர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொடூரமாக ஒரு குடும்பத்தை கொலை செய்துவிட்டு தப்பிப்பதற்காக அந்த கும்பல், உடலை வேறு இடத்தில் வீசி சென்றிருக்கின்றனர். அதாவது தரமணியில் கொலை செய்துவிட்டு, கவுரவ் குமார் மற்றும் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர். இதற்கு இடையில் மட்டும் சுமார் 5 கிமீ தூரம் உள்ளது.

இதனால் அந்த கும்பல் திட்டமிட்டே இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தகவல் கூறுகின்றனர். அதேபோல் மனைவியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. அவரது உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+