Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்து சமூகத்திற்கு சொந்தமானது” - அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் தீப தூணில் தீபம் ஏற்றும் வழக்கில், சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அதில், மலையின் 3 இடங்களை தவிர, மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் என்று கூறியுள்ளார்.

"திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு மற்றும் படிக்கட்டு மசூதிக்கு சொந்தமானது. ஆனால், மற்ற அனைத்து இடங்களும் இந்துக்களுக்கு சொந்தமானது. அதேபோல, கடந்த 2014ம் ஆண்டு வந்த தீர்ப்புக்கும், தற்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உண்மையை திரித்து கூறியிருக்கிறார்.

Annamalai Thiruparankundram BJP

2014ம் ஆண்டு தீர்ப்பு என்பது வேறு. அது மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், தற்போதைய வழக்கு தீப தூணில், தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறுகிறது. தர்காவில் இருந்து சுமார் 50 மீ தள்ளி இருக்கும் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் தற்போதைய வழக்கு. தர்காவும், தீப தூணும் வேறு வேறு மலையில் இருக்கிறது. எனவே இரண்டு வழக்குகளும் வெவ்வேறு. சட்டத்துறை அமைச்சர் கூறியது தவறு.

கடந்த 1996ம் ஆண்டு வந்த தீர்ப்பில் கூட, தர்காவில் இருந்து 15 மீ தள்ளி தீபம் ஏற்றலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் 2014ல் இந்த வழக்கை முடித்துவிட்டனர் என்று அமைச்சர் ரகுபதி பேசியிருக்கிறார். இல்லை, இந்த வழக்கு குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பிட்டிருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+