2 தொகுதிகளிலும் போட்டி.. பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தந்த அதிமுக
Recommended Video
சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் வேட்பாளர்களை அறிவித்து பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது பாஜக.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அக்டோபர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ல் எண்ணப்படுகின்றன.
நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டியில் திமுகவின் நா. புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். இதனிடையே 2 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக விருப்ப மனுக்களைப் பெற்று வந்தது.

பொன்னார், நயினார்
ஆனால் நாங்குநேரியில் போட்டியிட பாஜகவும் விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. நாங்குநேரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அல்லது நயினார் நாகேந்திரனை போட்டியிட வைக்க பாஜக விரும்பியதாகவும் கூறப்பட்டது.

அதிமுக வேட்பாளர்கள்
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத போதும் பாஜக தலைவர்கள் பூடகமாகவே கருத்துகளை கூறிவந்தனர். தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி இரு தொகுதிகளிலுமே அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கை கொடுக்காத கூட்டணி
நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிமுக அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது அதிமுக. ஆனால் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது அக்கட்சி.

பாஜகவுக்கு ஏமாற்றம்
அதனால் அண்மையில் வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலின் போது பாஜகவை கண்டுகொள்ளவில்லை அதிமுக. தற்போதும் 2 தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவின் கோரிக்கையை அதிமுக சட்டை செய்யாமல் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இது பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications