‛எங்களை அடிமைபோல் நடத்துறாங்க’.. ரகசிய இடத்தில் ராகுலிடம் புலம்பி தள்ளிய பாஜக எம்பி.. என்ன நடந்தது?
சென்னை: பாஜகவில் அடிமைத்தனம் செய்வது போன்ற போக்கு மனநிலை உள்ளதாக அந்த கட்சியின் எம்பி ஒருவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியிடம் புலம்பி தள்ளியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த கூட்டணி சார்பில் தலைவர்களின் 4 ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கிடையே தான் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சியின் தொடங்கியதன் 139வது ஆண்டு விழாவான இன்று ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் பாஜகவில் தொண்டர்கள், தலைவர்கள் அடிமைத்தனம் செய்யப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த நிறையபேர் தற்போது எம்பிக்களாக உள்ளனர். அப்படியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த ஒருவர் லோக்சபாவில் என்னிடம் நடுக்கத்துடனும், ஒருவித பயத்துடனும் தனியாக பேச வேண்டும் என கூறினார். ரகசியமாக நான் அவரை சந்தித்தேன். அப்போது நீங்கள் பாஜகவில் இருக்கிறீர்கள். நான் காங்கிரஸை சேர்ந்தவன். என்னிடம் ஏன் நீங்கள் பேச வேண்டும் என பதிலுக்கு கேட்டேன்.
இதை கேட்டதும் அவரது முகத்தில் பயம் தொற்றி கொண்டது. இதையடுத்து நான் எல்லாம் சரியாக தானே இருக்கிறது எனக்கேட்டேன். அத்க அவரிடம் இருந்து பதில் வரவில்லை. இருப்பினும் பாஜகவில் இணைந்தை தற்போது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் பாஜகவில் தற்போது இருக்கிறேன். ஆனால் என் மனம் முழுவதும் காங்கிரஸிடம் இருக்கிறது என்றார்.
இதை கேட்ட நான் உங்களின் உடல் பாஜகவில் உள்ளது. மனம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. உங்களிடம் பயம் உள்ளது என்றேன். அதோடு ஏன் பயப்படுகிறீர்கள் என வினவினேன். அதற்கு அவர் பாஜகவில் அடிமைத்தனமான போக்கு உள்ளது. இவர் இப்படி தெரிவிக்க என்ன காரணம்? என்பதையும் விளக்கினார். அதாவது பாஜகவில் மேலிடத்தில் இருந்து தான் உத்தரவுகள் வரும். அந்த உத்தரவுகளை தான் பின்பற்ற வேண்டும். மாறாக கட்சி தொண்டர்களின் குரல்கள் கேட்கப்படுவது இல்லை. மேலிட முடிவு நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கூட நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு காலத்தில் அரசர் போடும் உத்தரவுகளை மக்கள் அப்படியே பின்பற்ற வேண்டிய சூழல் இருந்தது. இது தற்போது பாஜகவில் நிலவி வருவதாக கூறி புலம்பினார்'' என ராகுல் காந்தி கூறினார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியை ரகசியமாக சந்தித்து புலம்பிய பாஜக எம்பி யார் ? என்பது பற்றி நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications