பாமகவையா கேவலமா பேசுறீங்க! இருங்க எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று குண்டு வெடிக்கும்! மர்ம கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பாமகவுக்கு எதிராக திமுக பேசி வருவதால் இன்று இரவு 12 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு பகுதிகளுக்கு ரயிலானது இயக்கப்படுகிறது. அந்த வகையில் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்ய வருகை தருகிறார்கள்.

chennai egmore bomb

இந்த நிலையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கும் கட்சிக்கு ஒரு பாடமாக கருதி நான் எழும்பூர் ரயில் நிலையங்களில் சரியாக இரவு 12.15 மணிக்கு வெடிக்கும் வகையில் வெடிகுண்டை வைத்துள்ளேன்.

என் வன்னியர் சமுதாயத்துக்காக ரயில் நிலையங்களில் நான் வெடிகுண்டு வைத்துள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில்வே அதிகாரிக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சோதனை நடத்தப்பட்டது.

chennai egmore bomb

இதே காரணத்தை சொல்லி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+