பாமகவையா கேவலமா பேசுறீங்க! இருங்க எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று குண்டு வெடிக்கும்! மர்ம கடிதம்
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பாமகவுக்கு எதிராக திமுக பேசி வருவதால் இன்று இரவு 12 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு பகுதிகளுக்கு ரயிலானது இயக்கப்படுகிறது. அந்த வகையில் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்ய வருகை தருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கும் கட்சிக்கு ஒரு பாடமாக கருதி நான் எழும்பூர் ரயில் நிலையங்களில் சரியாக இரவு 12.15 மணிக்கு வெடிக்கும் வகையில் வெடிகுண்டை வைத்துள்ளேன்.
என் வன்னியர் சமுதாயத்துக்காக ரயில் நிலையங்களில் நான் வெடிகுண்டு வைத்துள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில்வே அதிகாரிக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சோதனை நடத்தப்பட்டது.

இதே காரணத்தை சொல்லி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications