தமிழகத்தில் ஆம்னி பஸ் எப்போது முதல் ஓடத்தொடங்கும்.. உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். இதனால் தமிழகத்தில் ஆறு மாதத்திற்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. சா வரி பிரச்சனை காரணமாக இயக்கப்படாமல் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சேவை தொடங்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொருளாளர் தாரை.திருஞானம் கூறுகையல், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பதிவெண் கொண்ட 2500 ஆம்னி பேருந்துகள், புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா பதிவெண் கொண்ட 1000 பேருந்துகள்உள்ளன.

ஆம்னி பேருந்து தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். ஆம்னி பேருந்துகளை இயக்குவதன் மூலம், நாள் ஒன்றுக்கு அரசுக்கு பல கோடி வரி கிடைத்து வருகிறது. அத்துடன் சுங்க கட்டணம், டீசல், வாகனம் உதிரிபாகம், டயர், இன்சூரன்ஸ் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.
கொரோனா காரணமாக, கடந்த 6 மாதமாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி தொழில் நடத்தி வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
கடந்த 7ம் தேதி முதல், ஆம்னி பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், ஏப்ரல் முதல் செப்டபம்பர் வரையிலான 6 மாதத்திற்கு ஆன சாலை வரியான ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்த செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 5 மாதமாக பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதால் அவற்றை பழுது பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். சர்வீஸ் செய்வது, இன்சூரன்ஸ் என ஒரு பேருந்தை மீண்டும் இயக்க ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் தான் பயணிகளை அமர வைக்க வேண்டும் என்று அரசு கூறியிருக்கிறது. இதனிடையே 6 மாத சாலை வரியை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு, வரும் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் எந்த தீர்ப்பு வந்தாலும், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications