ஜாமீன் வாங்குறதுதான் முக்கியம்.. விஜயை கண்டுக்காத புஸ்ஸி ஆனந்த்? பின்னணி காரணமே.. வேறு மேட்டராமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜாமீன் பெறுவதில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இப்போதைக்கு அவர் தலைமறைவாக இருக்கிறார்.

கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TVK Vijay

கரூர் போலீஸ் எப்ஐஆர்

கரூரில் நடைபெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், "அரசியல் பலத்தை காட்டும் நோக்கில் கூட்டம் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக துவக்கப்பட்டது. தொண்டர்கள் மரங்கள் மற்றும் கடைகள் மீது ஏறி அமர்ந்தனர். இதில் மரக்கிளைகள் முறிந்து கீழே நின்றவர்கள்மீது விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்ததாக, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருத்தல், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளின் இல்லாமை, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அழுத்தம் ஆகியவற்றால் மக்கள் உடல் நிலை சோர்ந்து கீழே விழுந்ததாகவும், அவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும் எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

புஸ்ஸி ஆனந்த் கைது முயற்சி

இந்த நிலையில்தான் கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை விரைவில் கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜாமீன் பெறுவதில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இப்போதைக்கு அவர் தலைமறைவாக இருக்கிறார். கைதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக இருக்கிறாராம். புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் உள்ளே என்ன நடக்கிறது.. இப்போது நடக்கும் பிரச்சனையை எப்படி சரி செய்வது.. விஜய்க்கு ஆதரவாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று எதை பற்றியும் புஸ்ஸி ஆனந்த் கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது.

விஜயை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக கரூர் அசம்பாவிதத்திற்கு பின் திருச்சி செல்லும் வழியிலேயே.. புஸ்ஸி ஆனந்த்தை விஜய் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. உங்களால்தான் இவ்வளவு பிரச்சனை ஏற்பாடு சரி இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் கடுமையாக கோபம் அடைந்து உள்ளார்.

இதையடுத்தே புஸ்ஸி ஆனந்த் அன்று வேறு காரில் மாறி சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே புஸ்ஸி ஆனந்த் இப்போது கட்சிக்குள், கரூர் விவகாரத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி கவலையே படவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு முதலில் பெயில் கிடைக்க வேண்டும்.. அதுதான் முக்கியம் என்று விஜய் தீவிரமாக இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+