சென்னையில் வெயில் காலம்.. கசகசன்னு தவிக்கும் போலீஸார்.. இதோ வந்துருச்சு கறிவேப்பிலை மோர்!
போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சென்னை: மோர் வழங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. இன்னும் 2 மாசத்துக்கு இந்த வெயிலின் பிடியில் தமிழக மக்கள் சிக்கி தவிக்க போகிறார்கள். இதில் போக்குவரத்து போலீசாரின் நிலைமையோ இன்னும் மோசம்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் அவர்கள் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சம் பழச்சாறு வழங்கும் ஒரு புதிய திட்டத்தை மறைந்த ஜெயலலிதா 2012ம் ஆண்டு கொண்டுவந்தார்.
ஆனால் தங்களுக்கு எலுமிச்சம் பழச்சாறுக்கு பதில் மோர் வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்ற ஜெயலலிதாவும், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் என 4 மாசத்துக்கு போக்குவரத்து போலீசாரின் விருப்பப்படி எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க உத்தரவிட்டார்.
அந்த வகையில் இன்று போக்குவரத்து போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டத்தினை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். கறிவேப்பிலை மணத்துடன் கூடிய ஜில் மோர் பாக்கெட்டுகளை கமிஷனர் எடுத்து தர போலீசார் அதை வாங்கி குடித்தனர். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் போக்குவரத்து போலீசாருக்கு இன்று முதல் 4 மாதங்களுக்கு மோர் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications