ஓபிஎஸ், ஓபி ரவீந்திரநாத்திற்கு எதிரான வழக்குகள் ரத்து.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத்குமார் ஆகியோருக்கு எதிராக தேனி போலீசார் பதிவு செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோன்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலில் போடி தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியின்றி வென்றார். இருவருமே தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தங்கள் சொத்து விவரங்கள், கல்வி தகுதிகள் உள்ளிட்டவற்றை மறைத்து இருப்பதாகவும் இருவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேனியின் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவின் படி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர். தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஓ பன்னீர் செல்வமும் ரவீந்திரநாத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி என்.வெங்கடெஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ''மனுதாரர்களுக்கு எதிராக புகார்தாரர் தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவுக்கு ஆதரவாக பிரமாண மனு எதையும் தாக்கல் செய்யவில்லை.
பிரமாண மனு இன்றி அளிக்கப்படும் புகார் மனுவையும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. எனவே, மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடுகிறேன்" என்று உத்தரவிட்டார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications