Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை விமான நிலையம்.. முக்கிய கோரிக்கை வைத்த தமிழக எம்.பி.க்கள்.. வெளிப்படையாக மறுத்த மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மிக முக்கியமான நகரமாகும். பெரிய நகரமான மதுரையில் விமான நிலையம் உள்ளது. சென்னைக்கு அடுத்து உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்ற விமானநிலையமாக இது உள்ளது.

ஆனால் மதுரை விமானநிலையம் இதுவரையிலும் சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிப்படவில்லை. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு என வெளிநாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டாலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையங்களுடன் விமானப் போக்குவரத்து தொடர்பாக மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இதன்படி மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்பட்டால் மட்டுமே வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை மதுரைக்கு இயக்க முடியும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.

தமிழக எம்.பி.க்கள் குரல்

தமிழக எம்.பி.க்கள் குரல்

மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ''மதுரை விமான நிலையம் 1956 இல் உருவாக்கப்பட்டது. 2010 -இல் யூ.பி.ஏ. அரசாங்கத்தில் புதிய முனையம் கிடைத்தது. ஆனால், இன்னும் சர்வதேச அந்தஸ்துக்காக காத்திருக்கிறோம். கோரக்பூர்,திருப்பதி விமான நிலையம் விரைவாக சர்வதேச விமான நிலைமான நிலையில் மதுரை விமான நிலையத்தையும் இதுபோன்று ஆக்க வேண்டும்' என்று அவர் பேசினார்.

கடிதம் கொடுத்தனர்

கடிதம் கொடுத்தனர்

மேலும், மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றக்கோரி மதுரை எம்பி சு.வெங்கடேசன், விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் ஆகியோர் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியாவிடம் கடிதம் அளித்தனர். தமிழக எம்பிக்கள் கார்த்தி பி.சிதம்பரம், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் இதில் கையெழுத்திட்டனர். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

 என்ன நியாயம்?

என்ன நியாயம்?

அந்த கடிதத்துக்கு பதிலளித்த ஜோதிராதித்யா சிந்தியா ''பல வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது. ஏற்கெனவே ஏராளமான விமான நிலையங் களை இணைத்து விட்டோம். எனவே மதுரையை இணைக்க முடியாது. மது ரையில் இருந்து இயக்கப்படும் இந்திய விமானங்களை அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூருக்கு இயக்குவதற்கான ஏற் பாடுகளுக்கு முன்னுரிமை தருகிறோம்'' என்று கூறினார், இந்த தகவலை சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+