பூமி இவ்வளவு அழகா இருக்குமா?.. சந்திரயான் 2 முதல்முறை வெளியிட்ட புகைப்படம்.. இதை பாருங்க!
சந்திரயான் 2 மூலம் முதல்முறை வெளியிடப்பட்ட புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
சென்னை: சந்திரயான் 2 மூலம் முதல்முறை வெளியிடப்பட்ட பூமியின் புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டு இரண்டு வாரம் ஆகிவிட்டது. கடந்த 22ம் தேதி மதியம் 2.49 மணிக்கு சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக சந்திரனை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
சந்திரயான் 2 பூமியில் இருந்து செலுத்தப்பட்டதில் இருந்து நிலவை அடையும் வரை மொத்தம் 48 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. தற்போது இது பூமியை சுற்றிக்கொண்டு இருக்கிறது.
அதோடு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் நிலவை நோக்கி நகர்ந்து செல்லும். அதன்படி இதுவரை 4 முறை சந்திரயான் 2ன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டுள்ளது. இதோடு அது தனது 18 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டது.
#ISRO
— ISRO (@isro) August 4, 2019
Earth as viewed by #Chandrayaan2 LI4 Camera on August 3, 2019 17:32 UT pic.twitter.com/KyqdCh5UHa
இது பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. சந்திரயான் 2 செலுத்தப்பட்ட பின் தற்போது பூமியை 475 கிமீ தூரத்தில் இருந்து சுற்றி வருகிறது. இந்த நிலையில் சந்திரயான் 2 மூலம் முதல்முறை வெளியிடப்பட்ட புகைப்படம் இஸ்ரோ மூலம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
#ISRO
— ISRO (@isro) August 4, 2019
Earth as viewed by #Chandrayaan2 LI4 Camera on August 3, 2019 17:37 UT pic.twitter.com/8N7c8CROjy
வட அமெரிக்கா மேலே செல்லும் நேரத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரில் இருக்கும் L14 கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
#ISRO
— ISRO (@isro) August 4, 2019
Earth as viewed by #Chandrayaan2 LI4 Camera on August 3, 2019 17:34 UT pic.twitter.com/1XKiFCsOsR
பூமியை மிகவும் அழகாக சந்திரயான் புகைப்படம் எடுத்துள்ளது. இணையம் முழுக்க இந்த முதல் மூன்று புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. ஆனால் இதற்கு முன் சந்திரயான் 2 மூலம் வெளியிடப்பட்டதாக இணையத்தில் நிறைய பொய்யான புகைப்படங்கள் சுற்றி வந்தது. இதனால் தற்போது உண்மையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.