சதுர்த்தி + தீபாவளி சர்ப்ரைஸ்.. அகவிலைப்படியோடு போனஸை அள்ளித் தரும் மத்திய அரசு.. சூப்பர் அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு போனஸ் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் பல வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது பணவீக்கம் 4 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது. அதாவது ஒரு பொருள் 1 ரூபாய்க்கு விற்கிறது என்றால் போக போக அதன் விலை 4 சதவிகிதம் வரை உயரும். அடுத்த வருடம் பெரும்பாலும் அந்த பொருளின் விலை 4 ரூபாயாக இருக்கும்.

Chaturthi + Diwali Surprise: Union Govt to give bonus along with Dearness allowances

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். அகவிலைப்படி உயர உயர சம்பளம் உயர வேண்டும். பொதுவாக பணவீக்கம் எவ்வளவு இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்தே ஹைக் இருக்கும். அதாவது பணவீக்கம் 5 சதவிகிதம் என்றால் பெரும்பாலும் ஹைக்கும் 5 சதவிகிதம் இருக்கும். அப்படி உயர்ந்தால் மட்டுமே மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பொருட்களை வாங்க முடியும்.

இந்த விலை உயர்வை சமாளிக்க தனியார் ஊழியர்களுக்கு வருடா வருடம் ஹைக் வழங்கப்படும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும்.

எவ்வளவு உயரும்: அந்த வகையில் இந்த வருடம் எவ்வளவு அகவிலைப்படி உயரும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 4 சதவிகிதம் வரை அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. தற்போது 42 சதவிகிதம் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி இன்னும் சில நாட்களில் 4 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது 46 சதவிகிதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் 26 ஆயிரம் ரூபாய் அடிப்படை வருமானம் வாங்கும் நபர்களுக்கு 11960 ரூபாய் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

அதாவது உங்கள் அடிப்படை வருமானம் 29200 ரூபாய் என்னும் பட்சத்தில், DA கணக்கீடு பின்வருமாறு செய்ய முடியும்: (42 x 29200) / 100 = 12264. உங்கள் அடிப்படை வருமானம் 29200 ஆக இருந்தால் ( பே மேட்ரிக்ஸ் நிலை 5). நீங்கள் சம்பாதிக்கும் DA தொகை ரூ. 12264 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும்.

ஏப்ரலில் ஏஐசிபிஐ புள்ளி 0.9 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. கடந்த மாதமும் இதே அளவு புள்ளிகள் உள்ளது. இதன் மூலம் புள்ளிகள் தற்போது 136.2 ஆக உயர்ந்துள்ளது. இனிமேல்தான் இந்த மாதத்திற்கான புள்ளிகள் வர வேண்டும். அதை வைத்தே அகவிலைப்படி உயர்வு இருக்கும். இந்த மாத இறுதியில் இந்த புள்ளிகள் வரும். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அறிவிப்பு: செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு போனஸ் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் பல வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி விநாயகர் சதுர்த்தி, தீபாவளியை சேர்த்து போனஸ் வழங்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+