பேஸ்புக் காதலால் வாழ்க்கையில் நடக்ககூடாத விபரீதம்.. கதறும் கல்பனா.. கைதான புதிய கணவன்
சென்னை :பேஸ்புக் மூலம் அறிமுகமாகி தன்னை நம்பி வந்த பெண்ணைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றவரை சென்னை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
தஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் கல்பனா (38). இவர் தஞ்சையில் தனியார் வங்கி ஒன்றில் கிரிடிட் கார்டு பிரிவில் பணியாற்றிய போது பேஸ்புக் மூலம் சென்னை ஆவடி அண்ணாநகரைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் (35) என்பவர் பழக்கம் ஆகி உள்ளார். இருவரும் ஆரம்பத்தில் நட்பாகப் பழகினர். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளார்கள்..
சபாஷ்.. ஆக்சிஜன் வசதியுடன் 2 பஸ்கள்.. ஒரே நேரத்தில் 24 பேருக்கு சிகிச்சை.. கோவை ஆஸ்பத்திரியில்..!
இதையடுத்து தனது கணவர், குழந்தைகளை விட்டு பிரிந்த இவர், தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வந்தார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் ஹாஸ்டலில் தனியாக தங்கினார். அங்கு தான் கடந்த 3 வருடங்களாக வசித்து வந்தார்..
ஒரே வீடு
கடந்த ஜனவரி மாதம் கல்பனாவை பிரசன்ன வெங்கடேஷ் திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஆவடி பருத்திப்பட்டு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு குடிபெயர்ந்தனர்.. அந்த வீட்டுக்கு பிரசன்ன வெங்டேஷ், தன்னுடைய அம்மா விஜயா (51), அப்பா ரங்கசாமி (66), தங்கை புவனேஸ்வரி (30) ஆகியோரை அழைத்து வந்தார். அதன் பிறகு அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்துள்ளார்கள்.
பாலியல் தொழில
தொழில் ஈடுபட சம்மதிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆபாசப் படத்தை இணையதளத்தில் பதிவு செய்துவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். கல்பனா சம்மதம் தெரிவிக்காததால் அவரை பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினர் அடித்து உதைத்துள்ளார்கள். கல்பனாவிடமிருந்த ஐந்து சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாயையும் பிரசன்னா குடும்பத்தினர் பறித்துக்கொண்டு ரூமில் அடைத்து சித்ரவதை செய்தார்களாம்.
சிறையில் அடைப்பு
ஒரு கட்டத்தில், பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினரிடமிருந்து தப்பிய கல்பனா, ஆவடி காவல் நிலையத்தில் தனக்கு நடந்த . கொடுமைகளை புகாராக கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு பிரசன்ன வெங்கடேஷ், அவரின் அப்பா ரங்கசாமி, அம்மா விஜயா, தங்கை புவனேஸ்வரி ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து, அவர்களைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சுயரூபம்
மனைவி, குழந்தைகள் உள்பட குடும்பத்தை விட்டு வேறு ஒருவரை நம்பி தஞ்சையில் இருந்து சென்னைக்கு வாழ வந்த கல்பனா, புதிய கணவனின் சுயரூபம் தெரிந்து நொந்து போய் உள்ளார். திருமணம் ஆன இரு வாரங்களில் புதிய கணவனின் சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது.
கைதாகிய வெங்கடேஷ்
பெண்களுடன் இருநத பழக்கத்தை தட்டிக்கேட்டதால், கல்பனாவின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதோடு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துப்போவதாகவும் கணவர் பிரசன்ன வெங்கடேஷ் மிரட்டி உள்ளார் என்றும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.