சென்னை: சொத்து வரி பாக்கி? உங்களை தேடி நோட்டீஸ் வரலாம்.. ஆக்சனில் இறங்கிய அதிகாரிகள்
சென்னை : கடந்த சில ஆண்டுகளாக சொத்து வரி பாக்கி செலுத்தாத வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி வரி கேட்டு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளது.
சென்னை மாநகராட்சியில் மண்டல அளவிலான வருவாய் அதிகாரிகள் ரூ 50,000 மற்றும் ரூ 1 லட்சத்துக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளவர்கள், அல்லது அதற்கு மேல் அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களிடம் வரி நிலுவைத் தொகையை வசூலிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

நோட்டீஸ்
இந்நிலையில் வரியை வசூலிக்கு முயற்சியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். சனிக்கிழமையன்று, அண்ணா சாலையில் உள்ள ஒரு அலுவலக வளாகத்திற்கு ரூ .34.7 லட்சம் வரை வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதேபோல், தி நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கும் பல லட்சம் நிலுவைத் தொகையை செலுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த கடைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

வணிக வளாகம்
திரு-வி-க- நகர் மண்டலத்தில், ஒரு மாலுக்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.1.2 கோடி கொடுக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்தமாலுக்குள் உள்ள 10 வெவ்வேறு வணிக நிறுவனங்களுக்கு வரி செலுத்த வேண்டி இருந்ததால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு துண்டிப்பு
வரி செலுத்தாமல் ஏமாற்றும் நிறுவனங்கள், வரி நிலுவை தொகை செலுத்த மறுக்கும் கட்டிடங்களுக்கு நீர் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்குமாறு சென்னை பெருமாநகராட்சி குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் மின்சாரி வாரியம் ஆகியவற்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு உத்தரவு
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரம் இதுபற்றி கூறுகையில், குறைந்தது 500-600 பேர் பல லட்சங்கள் தராமல் பாக்கி வைத்துள்ளனர். 2018 வரையிலான நிலுவைத் தொகையை வசூலிக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒரு நிதியாண்டின் முதல் ஆறுமாதத்தில் வரி வசூலை உயர்த்துவதற்காக நாங்கள் மேற்கொள்ளும் வழக்கமான செயல்முறை தான்.
Recommended Video

அரசு அதிரடி
இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் வசூலிக்க வேண்டிய வரி மற்றும் நிலுவை தொகைகளாக ரூ. 650 கோடியாக இலக்கு நிர்ணயித்துள்ளோம். கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு வரி வசூல் மிகவும் மோசமாக இருந்ததால் அப்போது வரி வசூலிக்கப்படவில்லை . 2020-21 நிதியாண்டில், சென்னை மாநகராட்சியால் சுமார் 470 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிந்தது. அதை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி ஏற்கனவே சுமார் 300 கோடி வசூலித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications