சூப்பர்.. சென்னையில் இனி மழைநீர் வீணாகாது.. குளங்கள் அமைக்க போகும் மாநகராட்சி.. மாஸ் திட்டம்
சென்னை: சென்னை மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குளங்களை அமைக்கும் அசத்தலான திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அமைக்கப்படும் குளங்களால் மழை நீர் சாலையில் தேங்கும் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதன்முதலாக இந்த குளங்கள் பெரம்பூரில் அமைக்கப்படவுள்ளதாகவும், பின்னர் மற்ற பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சாலைகளில் தேங்கும் மழைநீர்
தலைநகர் சென்னையில் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வரும் பிரச்சினைகளில் ஒன்று சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் தேங்குவது தான். இந்த பிரச்சினையை தீர்க்க எத்தனையோ வழிமுறையை கையாண்ட பிறகும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியவில்லை. எனினும், தற்போதைய திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்களை அமைத்தது, பழைய வடிகால்களை தூர்வாரியதால் கடந்த சில மாதங்களாக மழை நீர் தேங்குவது குறைந்துள்ளது. எனினும், முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

10 அடி ஆழ குளங்கள்
இந்நிலையில்தான், சென்னையில் பல பகுதிகளில் மினி குளங்களை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 10 அடி ஆழத்தில் இந்த குளங்கள் அமைக்கப்படவுள்ளன.இதில்நீர் ஊறவைக்கும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மேலும், மழைநீர் வடிகால்வாய்களும் இந்தக் குளங்களி்ல இணைக்கப்பட உள்ளன. மேலும் சாலை மேற்பரப்பு ஓடையும் இதில் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ள நீர் இந்தக் குளத்துக்கு சென்றுவிடும்.

எந்தப் பகுதியில் முதலில்?
இந்த குளங்களைச் சுற்றிலும் தோட்டங்கள், அலங்கார மின் விளக்குகள், அமரும் இருக்கைகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 5 இடங்களில் இந்தக் குளங்களையும், பூங்காக்களையும் அமைக்க ரூ. 92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள முரசொலிமாறன் பூங்கா தெற்கு பகுதியில் ரூ. 18 லட்சம் செலவில் இந்த குளம் அமைக்கப்படுகிறது. வி.ஜி.பி செல்வா நகர் 2-வது பிரதான சாலையில் ரூ.12 லட்சம் செலவிலும், கங்கை தெருவில் ரூ.8 லட்சம் செலவிலும் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளன. பின்னர், படிப்படியாக இந்தக் குளங்கள் மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வறட்சியும் தடுக்கப்படும்
சாலைகளில் தேங்கி வீணாகும் மழை நீர், இந்த பூங்காவில் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவிக்கின்றன.எனவே, கோடை காலத்தில் தண்ணீர் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications