குலுங்கி குலுங்கி.. அழுது சென்னை பீச்சில் ஓடிய பெண்.. பின்னாலயே ஓடிய மீனவர்.. கடைசியில பார்த்தால்?
சென்னை: உருகி உருகி காதலித்திருக்கிறது இந்த ஜோடி.. இப்ப ஒரு மரணம், ஒரு துயரம் அந்த குடும்பத்தை வாட்டி எடுத்து வருகிறது..!!
சென்னை எண்ணூர் ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.. 19 வயதாகிறது.. இவர் ஆட்டோ டிரைவர் வடிவேலு என்பவரை உயிருக்குயிராக விரும்பினார்.. வடிவேலுவும் ராஜேஸ்வரியை காதலித்து வந்துள்ளார். வடிவேலுக்கு 33 வயதாகிறது. இருவருமே கடந்த 6 மாதங்களுக்கு கல்யாணம் செய்துகொண்டனர்.
காதல் திருமணம்: கல்யாணம் ஆகி ஒரு நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கையில் திடீரென சிக்கல்கள் சூழ்ந்தன.. ராஜேஸ்வரிக்கும், வடிவேலுக்கும் அடிக்கடி தகராறுகள் வந்திருக்கின்றன. சம்பவத்தன்றும் இப்படித்தான் சண்டை வந்துள்ளது.

இதனால் ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு, அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.. ஆனால், மகளை பார்த்ததுமே, அவரது அப்பா கோபமாகி உள்ளார்.. "கல்யாணமான 6 மாசத்திலேயே, இப்படி சண்டை போட்டுவிட்டு வந்து நிற்கிறியே?" என்று மகளை கண்டித்ததாக தெரிகிறது.. ஏற்கனவே நொந்துபோய் வீட்டுக்கு வந்த ராஜேஸ்வரி, அப்பாவும் தன்னை திட்டிவிட்டதால், மேலும் வேதனைப்பட்டுள்ளார்.. இதற்குமேல் எங்கு போவது? என்று தெரியாமல், தற்கொலை செய்து கொள்ளம் முடிவுக்கும் வந்துள்ளார்.
இளம்பெண்: இவர்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே பீச் இருப்பதால், அழுதுகொண்டே கடலுக்குள் சென்று குதித்துவிட்டார்.. இளம்பெண் ஓடிப்போய் கடலில் விழுவதை பார்த்ததுமே, அங்கிருந்த மீனவர்கள் பதறிப்போய் ஓடினார்கள்.. கடலுக்குள் குதித்து, உடனடியாக ராஜேஸ்வரியை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.. பிறகு, வீட்டுக்கு தகவல் சொல்லி, உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் ராஜேஸ்வரியை அனுமதித்தனர்.
மிகவும் ஆபத்தான நிலைமையில் கொண்டு செல்லப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் டாக்டர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி இறந்துவிட்டார்.. இந்த விவகாரம் குறித்து எண்ணூர் போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.
நண்பர்கள்: இதனிடையே, ராஜேஸ்வரி இறந்துவிட்டதால், அவரது அண்ணன் ராஜேஷ், கடும் ஆவேசம் ஆகியுள்ளார். அதனால், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, மாப்பிள்ளை வடிவேல் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்..
"என் தங்கச்சி சாவுக்கு நீ தான் காரணம்" என்று சொல்லி கத்தியாலேயே வடிவேலுவின் தலையில் வெட்டியிருக்கிறார்.. மேலும், வடிவேலுவின் கை, கால்களையும் அடித்து உடைத்துள்ளார்.. இதில், வடிவேலுவின் இடது கையை உடைந்துவிட்டது.. குத்துயிலும் குலையுயிருமாக அலறி கீழே விழுந்தார் வடிவேலு..
சீரியஸ்: அந்த அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஏற்கனவே ராஜேஸ்வரியின் தற்கொலை சம்பந்தமாக விசாரணை நடந்துவரும்நிலையில், தப்பியோடிய ராஜேஷையும், அவரது நண்பர்களையும் தேடி வருகிறார்கள். இப்போது மருத்துவமனையில் ஐசியுவில் சீரியஸாக இருக்கிறாராம் ராஜேஷ்.. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை தந்து கொண்டிருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications