வேறலெவலில் அப்டேட் ஆகும் சென்னை அரசு பேருந்துகள்.. மக்களுக்கு குட்நியூஸ்
சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னரே அறிவிக்கும் திட்டம் மேலும் ஆயிரம் பேருந்துகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மற்ற ஊர்களுக்கும் சென்னைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற ஊர்களில் எல்லாம் தனியார் நகர பேருந்துகள் இயங்குகின்றன.ஆனால் சென்னை மாநகரில் மட்டும் அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் தான் இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னை புறநகர் பகுதிகளில் மிககுறைவாக தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

முழுக்க முழுக்க அரசு பேருந்துகள் இயக்கப்படுவதே இதற்கு காரணம். சென்னை மாநகரம் முழுவதும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 700 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3,454 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. சாதாரண கட்டணத்தில் 1,559 பேருந்துகளும், விரைவு மற்றும் சொகுசு - 1,674, 'ஏசி' - 48, சிறிய பேருந்துகள் - 207 இயக்கப்படுகின்றன. சென்னை மாநகர பேருந்துகளின் வாயிலாக தினமும் 28.70 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். சென்னையில் மொத்தம் 6026 பஸ் ஸ்டாப்புகள் உள்ளன.
இந்நிலையில் சென்னைக்கு புதிதாக வருபவர்கள், சென்னையில் புதிதாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால், அந்த பேருந்து நிறுத்தம் குறித்து நடத்துனர் சொன்னால் தான் தெரியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னரே அறிவிக்கும் திட்டம் 150 பேருந்துகளில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சியால் பயணிகள் எவ்வித சிரமமின்றியும், கால தாமதமின்றியும் பேருந்தில் இருந்து இறங்கிட பேருதவியாக இருந்தது.
இதையடுத்து சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னரே அறிவிக்கும் திட்டம் மேலும் ஆயிரம் பேருந்துகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் விரைவில் 500 பேருந்துகள் வாங்கவும் முடிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது கூடுதல் பேருந்துகள் தேவை என்பதால், கூடுதல் பேருந்துகள் வாங்கும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அரசு பேருந்துகள் எங்கு வருகிறது என்பதை பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தபடி அறியும் ஆப் வசதியை தமிழக அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications