முன்னெச்சரிக்கை..புயலில் இருந்து மீண்டது சென்னை..மகிழ்ச்சியோடு சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்னர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததன் காரணமாக வடசென்னை, தென் சென்னையில் கடலோர பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான படகுகள் சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூழ்கின.
தென்சென்னையில் கோவளம், ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம் பகுதிகளில் புயலால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படகுகள், மீன்பிடி வளைகளில் மணல்கள் மூடியுள்ளன.மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க ஏற்படுத்தப்பட்டிருந்த மரப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்து மணலால் மூடப்பட்டுள்ளது. முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.

இதனிடையே இன்று காலையில் தென் சென்னையில் ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து காசிமேட்டில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், புயல் பாதிப்பு குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசி ஆலோசனை நடத்தப்பட்டது.
இரவு பகலாக விடிய விடிய அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர். புயல், மழை பாதிப்புகளை அகற்ற பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி. இதுபோன்ற விரைவான பணியால்தான் மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புயலால் மழை அதிகமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படவில்லை. முறிந்து விழுந்த மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டன. அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து தடையின்றி செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பால் தான் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications