தீபாவளியன்று '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.. தடை போட்டது ஹைகோர்ட்
சென்னை: '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 5ம் தேதி இரவு முதல் 6ம் தேதி இரவு வரை நடத்தப் போவதாக அறிவித்திருந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த ஊழியர்களின் சங்கம் அரசுக்கு வலியுறுத்தி இருந்தது.

தமிழகம் முழுவதும் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பேர் இந்த சேவையில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 950க்கும் மேற்பட்ட '108' ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
உயிர் காக்கும் அவசர உதவியில், ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எனவே நவம்பர் 5ம் தேதி இரவு முதல் 6ம் தேதி இரவு வரை 24 மணி நேரம் ஸ்ட்ரைக் செய்வதற்கு '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த பொதுநல வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்புலன்ஸ் சேவை என்பது அத்தியாவசிய சேவை பிரிவுகளின் கீழ் வருவதால், அதன் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.
அதோடு, ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications