விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலை இப்போது திடீரென அக்கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இதை வரும் காலத்தில் புதிய அரசியல் கட்சியாக மாற்றுவதே அவரது திட்டம்.. அண்ணாமலையின் அரசியல் வியூகம் என்ன.. வரும் நாட்களில் அவர் போட்டுள்ள திட்டம் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், மாநில பாஜக முகமாக இருந்த அண்ணாமலை, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டதாகக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

டார்கெட் 2031
அண்ணாமலையின் இந்த திடீர் விலகலுக்குப் பின்னால் ஒரு நீண்ட அரசியல் வியூகம் ஒளிந்திருக்கிறது. உடனடித் தேர்தல் ஆதாயங்களை எதிர்பார்க்காமல், சாமானிய மக்களை மையமாகக் கொண்ட ஒரு மாற்று அரசியலை உருவாக்கவே தான் இந்த புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தற்போதே தனது "We The Leaders" என்ற அமைப்பை ஒரு அரசியல் இயக்கமாக அவர் மாற்றும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார். இது வரும் 2031 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முழுமையான அரசியல் கட்சியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் புதிய பாதை
கடந்த 2024 பிப்ரவரியில் நடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றி கழகம்' கட்சியைத் தொடங்கினார். யாரும் எதிர்பார்க்காத வகையில், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு விஜய் ஆட்சியைப் பிடித்து அசத்தினார். இந்த 'விஜய் ஃபேக்டர்' தான், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் ஒரு புதிய பிராந்தியச் சக்தியாக உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அண்ணாமலைக்கும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிரடி அரசியல்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது, அவரது அதிரடியான அரசியல் அணுகுமுறையால் மிகப் பெரிய அளவில் பாப்புலர் ஆனார். திமுக ஆட்சியின் போதே, திமுகவிற்கு எதிரான ஊழல் புகார்களை "DMK Files" என்ற பெயரில் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார். ஆனால், அவரது இதே அதிரடிப் போக்குதான் கூட்டணியில் இருந்த அதிமுகவோடு மோதலை உருவாக்கியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நீதிமன்றத் தண்டனையை அண்ணாமலை விமர்சித்தது அதிமுகவை கோபப்படுத்தியது. இந்தத் தொடர் மோதல்களின் விளைவாக, கடந்த செப்டம்பர் 2023ல் அதிமுக தனது பாஜக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டது.
அடுத்து என்ன
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் 2025ல் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைந்தபோது, அண்ணாமலை தனது தலைவர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. அதன் பின் நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார். தற்போது அண்ணாமலையின் ராஜினாமாவைக் குறித்துப் பேசிய நயினார், "அவர் விலகியதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலை, இப்போது திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார். இந்த இயக்கத்தில் வெறும் சில மணி நேரத்திலேயே சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இது தமிழக அரசியல் களத்தை இப்போதே சூடாக்கியுள்ளது!
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications