ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு.. கொடநாடு வழக்கில் தனபாலுக்கு எதிராக எடப்பாடி வழக்கு தொடர ஹைகோர்ட் அனுமதி
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் கடந்த 16ஆம் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்சியுள்ளார்.
கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மனு மீது நீதிபதி மஞ்சுளா இன்றைய தினம் விசாரணை நடத்தினார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை தொடர்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளித்தார்.
பின்னணி என்ன: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாக கொடநாடு எஸ்டேட் உள்ளது. சென்னையில் கோடை காலத்தின் போது ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் சென்று ஓய்வெடுப்பார். இது மினி தலைமைச் செயலகமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதை தடுக்க முயன்ற காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கார் ஓட்டுநரான கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில் நிறைய மர்மமான சம்பவங்கள் நடந்தன. எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த தினேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை வழக்கில் சில ஆவணங்கள் அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 11 ஆவது குற்றவாளியாக இருக்கிறார். இவர் ஜாமீனில் வெளியே வந்துதான் கொடநாடு வழக்கு குறித்து பேசி வருகிறார். இதற்கு தடை விதிக்கத்தான் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications