நான்கரை மாதத்திற்கு பின்.. திறக்கப்பட்ட கோயம்பேடு தானிய மார்க்கெட்! காய்கறி சேல்ஸ் எப்போது தெரியுமா?
சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
சென்னை: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அடுத்த கட்டமாக கோயம்பேடு காய்கறி, கனி, மலர் மார்க்கெட்டுகள் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்து, கொரோனா தொற்று பரவியதால் மே 5ஆம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. திருமழிசையில் காய்கறி சந்தை தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. படு சிரமத்திற்கு இடையே வியாபாரிகள் திருமழிசைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.

தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேல் கொரோனா பரவல் இருந்தாலும் நான்கரை லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த மாதம் 27ஆம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, செப்டம்பர் 18ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தானிய அங்காடி திறக்கப்படும் என்றும் கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து கடந்த மே மாதம் 5ஆம் தேதி மூடப்பட்ட உணவு தானிய மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உணவு தானிய மார்க்கெட்டில் உள்ள 290 கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. சந்தையின் வாயில் கதவுகள் திறக்கப்பட்ட போது விவசாயிகளும், வியாபாரிகளும் கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
அடுத்த கட்டமாக கோயம்பேடு காய்கறி, கனி, மலர் மார்க்கெட்டுகள் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications