Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேயர் பிரியாவை பார்த்தீங்களா.. ஒரு செகண்ட்கூட யோசிக்கலயே.. திமுக தனசேகரன் வீசிய வெடி.. கலங்கும் அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தூக்கி போட்டுள்ளார் திமுகவின் தனசேகரன்.. சென்னை மேயர் பிரியாவின் அடுத்த அதிரடியால், அதிமுக தரப்பு கலங்கி போயுள்ளதாம்.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இந்த கூட்டத்தில், நேரமில்லா நேரத்தில், கணக்கு நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன், சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் சொத்து வரி செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார்

Property tax news and property tax evasion in admk rule a special committee will be formed chennai mayor priya

தனசேகரன்: அப்போது தனசேகரன் பேசியபோது, "கடந்த அதிமுக ஆட்சியில் சொத்து வரி ஏய்ப்பு நடந்தது தொடர்பாக கணக்கு மற்றும் நிலை குழுவிற்கு பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும், சென்னையில் இயங்கி வரும் நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரி ஏய்ப்பு குறித்து பல புகார்கள் பெறப்பட்டன.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஓட்டல்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டும், இதுவரை தணிக்கை குழுவிற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இருந்தும், புகாரில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் கடந்த அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட சில நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரிகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஓட்டல்களில் அறைகள் குறைத்து காட்டப்பட்டுள்ளது.

அறை வாடகை: மேலும், அறை வாடகை தொகையை மிகவும் குறைத்து காட்டிவிட்டு, அந்த ஓட்டலின் இணையதளத்தில் அறையின் குறைந்தபட்ச வாடகையானது பல மடங்கு அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் மாநகராட்சியின் வரி வருவாயில் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக ஆலந்தூரில் ரேடிசன் புளூ ஒட்டல், விஜய் பார்க் ஓட்டல், துரைப்பாக்கம் பார்க் ஓட்டல், ஹாலிடே இன் ஓட்டல் , நோவா டெல் ஓட்டல் , ஆலந்தூரில் ஹபிலிஸ் ஓட்டல், தி நகர் ரெசிடென்சி, ஜி.ஆர்.டி கிராண்ட் போன்றவை வரி ஏய்ப்பு செய்துள்ளன.

முறைகேடுகள்: இந்த முறைகேடுகளை ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். குறைத்து வசூலிக்கப்பட்டவர்களின் சொத்துகளை மறு சீராய்வு செய்து அவற்றின் வரி ஏய்ப்பு தொகையை அபராதத்துடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பல துரிதமான நடவடிக்கைகள் மூலம் நிலுவை வரிகள் வசூலிக்கப்பட்டு வருகிறது..

சென்னையில் பல தனியார் பள்ளிகள் அனுமதி பெறாமல் பல கட்டிடங்கள், ஆடிட்டோரியம், நீச்சல் குளங்கள் கட்டியுள்ளன. இது குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.. அதனால், அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்து முறையாக கட்டிட அனுமதியும், சொத்து வரியும் போடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.. இப்போது, கோடைகாலம் என்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை உடனுக்குடன் கையாள சென்னை குடிநீர் வாரியம் மற்றும் கவுன்சிலர்கள் கொண்ட ஒரு இணைப்பு குழுவை உருவாக்க வேண்டும்" என்று பேசினார் தனசேகரன்.

பிரியா பதில்: தனசேகரனின் இந்த கோரிக்கைக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.. அப்போது, சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை மூலம் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனசேகரனுக்கு உறுதியளித்தார்... கடந்த கால ஏய்ப்பு செய்த தொகையும் திரும்பப் பெற வேண்டும் என்பதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் அழுத்ததின் காரணமாக முறைகேடுக்கு துணைபோன அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்று தனசேகரன் கோரியுள்ளதும், அதற்கு மேயர் பிரியா நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதும், அதிமுகவுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+