இதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை!
சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:
Recommended Video
இன்று (செப்டம்பர் 24 )மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்
செப். 26-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், செப். 27-ந் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டாச்சியர் அலுவலகம் 18, ஏத்தாப்பூர் (சேலம்) 11, சங்கரிதுர்க் (சேலம்), நீடாமங்கலம் (திருவாரூர்) தலா 9, செட்டிகுளம் (பெரம்பலூர்), நாவலூர் கொட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி) 8, அரவக்குறிச்சி (கரூர் , திருப்பூர் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இரு நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications